'ஜாக்பாட்..!' சட்டசபை தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட.. 4 மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வென்ற நிலையில், அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு பாஜக சார்பில் இன்னோவா கார் பரிசாக அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக, அதிமுக தவிர மக்கள் நீதி மய்யம், அமமுக நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களம் இறங்கின.
இந்தத் தேர்தலில் 133 இடங்களில் வென்று திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மக்கள் நீதி மய்யம், அமமுக நாம் தமிழர் கட்சிகளால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

பாஜக
ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட அதிமுகவால் 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இது கடந்த 2016இல் அக்கட்சி வென்ற இடங்களைக் காட்டிலும் 70 இடங்கள் குறைவாகும். அதேநேரம் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் களமிறங்கிய பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தமிழ்நாடு சட்டசபையில் நுழைந்தது.

4 பேர் வெற்றி
நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனை தோற்கடித்தார். மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசனை 300க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சிஆர் சரஸ்வதி தோற்கடித்தார். கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமலை பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தோற்கடித்து ஷாக் தந்தார். அதேபோல திருநெல்வேலி சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் வென்றார்.

எல் முருகன்
இந்த நால்வரது வெற்றி தமிழக பாஜகவுக்கு புதியதொரு தெம்பையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இதையடுத்து பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல் முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முன்னதாக தேர்தல் சமயத்திலேயே பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக அளிக்கப்படும் என்று எல் முருகன் அறிவித்திருந்தார். அதாவது பாஜக வேட்பாளர்கள் எத்தனை தொகுதிகளில் வெல்கிறார்களோ, அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னாவோ கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இன்னோவா கார்
ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை ஆகிய மாவட்டங்களில் பாஜக வேட்பாளர்கள் வென்றிருந்த நிலையில், அந்தத்தந்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட பாஜக தலைவர்களுக்கு இன்னோவா காரை பரிசாக அளித்தார்.
-
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications