100 நாளில் 10000 கொடி.. முதல் நாளே தப்பு கணக்கு காட்டிய நிர்வாகிகள்! அண்ணாமலைக்கு போன மேட்டர்.. திக்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தினமும் 100 கொடிக் கம்பம் என 100 நாட்களில் 10,000 கொடி ஏற்றப்படும் பாஜகவின் திட்டத்தில் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாம்.
சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலையின் வாடகை வீட்டில் அனுமதியின்றி பாஜக கொடி கம்பம் நட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கே அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற அரசு ஊழியரை தாக்கிய புகாரில், பாஜக மாநில விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அமர் பிரசாத் ரெட்டி சிறையில் உள்ள நிலையில், தனது வீட்டு முன்பு பாஜக கொடி கம்பம் நிறுவுவதை தடை செய்த தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தினமும் 100 கொடிக் கம்பம் என100 நாட்களில் 10,000 கொடி ஏற்றப்படும் என சூளுரைத்திருந்தார் அண்ணாமலை. அதன்படி , நவம்பர் 1-ந்தேதி இந்த பணியை தொடங்கினர் தமிழ்நாடு பாஜகவினர்.
இதனால் பல இடங்களில் போலீசுக்கும், பாஜகவினருக்கும் மோதல் வெடித்தது. அனுமதியின்றி கொடி ஏற்றப்படுவதை தடுத்து நிறுத்தினர். தமிழ்நாட்டில் உள்ள பாஜக கோட்டப் பொறுப்பாளர்கள், தங்கள் கோட்டத்தில் எத்தனை இடங்களில் கொடி ஏற்றப்பட்டது, அதில் போலீஸ் தடுத்து எத்தனை ? என்றெல்லாம் அண்ணாமலைக்கு கணக்கு கொடுத்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 45 இடங்களில் கொடி ஏற்றப்பட்டது என சென்னை கோட்டப் பொறுப்பாளர் கரு.நாகராஜன் கணக்கு கொடுத்துள்ளார். ஆனால், இந்த பட்டியல் சரி அல்ல என அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்திடம் சென்னை பாஜகவினர் சிலர் ஆதாரப்பூர்வமாக புகார் கூறியுள்ளனர். அதாவது, சென்னையில் 45 இடங்களில் பாஜக கொடி ஏற்றப்பட்டதாக சொல்லப்பட்ட கணக்கில், 7 இடங்களில் ஏற்றப்பட்ட கொடி தான் புதியது.
மற்ற 38 இடங்களில் ஏற்றப்பட்ட கொடிகள், ஏற்கனவே ஏற்றப்பட்டவை. ஏற்கனவே கொடிக்கம்பம் இருக்கும் நிலையில், அதில் இருந்த பழைய கொடியை கழற்றிவிட்டு புதிய கொடியை ஏற்றியுள்ளனர். இதனை புதிதாக புதிய இடத்தில் கொடிக் கம்பம் நட்டு கொடி ஏற்றப்பட்டதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள். அதனால் இது புதிய கொடிக் கம்பம் இல்லை.
அந்த வகையில் புதிதாக கொடிக் கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது 7 இடங்கள் மட்டுமே. அந்த 7 இடங்களிலும் அனுமதியின்று கொடிக் கம்பம் நட முயற்சிப்பதாக கூறி அதனை தடுத்து விட்டது போலீஸ். அதனால் அந்த 7 இடங்களிலும் கொடி ஏற்றப்படவில்லை " என்று கேசவ விநாயகத்திடம் புகார் வாசித்துள்ளனர் சென்னை பாஜகவினர்.
இந்த கணக்கு விவகாரம் தற்போது அண்ணாமலைக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். இந்த நிலையில், கொடி ஏற்றும் வைபத்தில் பாஜகவுக்கும் போலீசுக்கும் ஏற்படும் மோதல்களால் பாஜகவினர் மீது வழக்கு போட திமுக அரசு திட்டமிடுவதை அறிந்த கேசவ விநாயகம், "அனுமதியின்றி கொடி ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். முறையாக அனுமதி வாங்குங்கள். அனுமதி கிடைக்கவில்லை எனில் போராடுங்கள். அனுமதி பெற்று கொடி ஏற்றுங்கள். அதனால், இந்த விவகாரத்தில் உங்களின் வேகத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் " என்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் கேசவ விநாயகம்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications