Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுவையில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா? புஸ்ஸி ஆனந்த் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுவையில் வரும் 5 ஆம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தவெகவினர் காவல்துறையினரிடம் மனு அளித்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் அனுமதி பெறுவதற்காக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி மீண்டும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் எதுவும் நேரடியாக அளிக்காமல் சிரித்தவாறே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

bussy-anand-files-petition-third-time-seeking-permission-for-tvk-leader-vijay-campaign-in-puducherry

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வந்தார். கரூர் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஒத்தி வைத்தார். கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை புதிதாக உருவாக்கினார். இவர்களுக்கு கூட்டநெரிசலை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்பிறகு விஜய் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி வரும் 4 ஆம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த த.வெ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தான் புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் புதுவை காவல்துறையிடம் அனுமதி கடிதம் அளித்தனர்.

ஆனால் புதுவை போலீசார் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை தவெகவினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அப்போது அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தான் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீண்டும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தார்.

5 ஆம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இன்னும் காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்த புஸ்சி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அனுமதி கிடைத்ததா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் எதுவும் நேரடியாக அளிக்காமல் சிரித்தவாறே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+