Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் திக் திக்.. டிவி பெண் ஆங்கர் மீது பகீர் புகார்! பலரை அடைத்து வைத்து கொடுமை -ஐகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தில் உள்ள தனியார் மீட்பு மையத்தில் சட்டவிரோத காவலில் யாராவது அடைக்கப்பட்டு உள்ளார்களா என்பதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சி தொகுப்பாளினி நந்தினி என்பவரும், அவரது சகோதரியும் சேர்ந்து தந்தையை சொத்துக்கு ஆசைப்பட்டு தனியார் மீட்பு மையத்தில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், பலர் சட்டவிரோதமாக அந்த மீட்பு மையத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாகவும் அவரது மற்றொரு சகோதரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப்பை கிளப்பி உள்ளது.

Case against TV anchor for illegal custody in Chennai High court

சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த மலர்விழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது தந்தை நாராயணன் மற்றும் தாய் சந்திரா ஆகியோர் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் மற்ற இரு மகள்களுடன் வசித்து வருவதாகவும், தான் காதல் திருமணம் முடித்து தனியாக வசித்து வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.

தன் தந்தை பெயரில் உள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் தனது சகோதரிகள் பிரேமாவும், சின்னத்திரை தொகுப்பாளினியாக உள்ள நந்தினியும் தந்தையை கடத்தி, தீபக் என்பவர் நடத்தி வரும் நியூ லைஃப் மீட்பு மையத்தில் வைத்து கொடுமைப்படுத்தியதாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மீட்கப்பட்ட நாராயணனை சேலம் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நாராயணன் விருப்பப்படி மகள் மலர்விழியுடன் செல்ல அனுமதித்து, ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Case against TV anchor for illegal custody in Chennai High court

இதற்கு இடையே மனுதாரர் மலர்விழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.விஜயபாஸ்கர், குறிப்பிட்ட மறுவாழ்வு மையத்தில் நாராயணனை போல மேலும் பலரும் அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அது தொடர்பாக நீதிமன்றம் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள், சேலம் அரிசிபாளையம் சாலையில் அமைந்து உள்ள நியூ லைஃப் மீட்பு மையத்தில் சட்டவிரோத காவலில் எவரேனும் வைக்கப்பட்டு உள்ளார்களா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சேலம் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+