சேலத்தில் திக் திக்.. டிவி பெண் ஆங்கர் மீது பகீர் புகார்! பலரை அடைத்து வைத்து கொடுமை -ஐகோர்ட் அதிரடி
சென்னை: சேலத்தில் உள்ள தனியார் மீட்பு மையத்தில் சட்டவிரோத காவலில் யாராவது அடைக்கப்பட்டு உள்ளார்களா என்பதை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி தொகுப்பாளினி நந்தினி என்பவரும், அவரது சகோதரியும் சேர்ந்து தந்தையை சொத்துக்கு ஆசைப்பட்டு தனியார் மீட்பு மையத்தில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், பலர் சட்டவிரோதமாக அந்த மீட்பு மையத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாகவும் அவரது மற்றொரு சகோதரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப்பை கிளப்பி உள்ளது.

சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த மலர்விழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தனது தந்தை நாராயணன் மற்றும் தாய் சந்திரா ஆகியோர் கொண்டப்பநாய்க்கன்பட்டியில் மற்ற இரு மகள்களுடன் வசித்து வருவதாகவும், தான் காதல் திருமணம் முடித்து தனியாக வசித்து வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.
தன் தந்தை பெயரில் உள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் தனது சகோதரிகள் பிரேமாவும், சின்னத்திரை தொகுப்பாளினியாக உள்ள நந்தினியும் தந்தையை கடத்தி, தீபக் என்பவர் நடத்தி வரும் நியூ லைஃப் மீட்பு மையத்தில் வைத்து கொடுமைப்படுத்தியதாக குறிப்பிட்டு உள்ளார்.
இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மீட்கப்பட்ட நாராயணனை சேலம் மாவட்ட காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நாராயணன் விருப்பப்படி மகள் மலர்விழியுடன் செல்ல அனுமதித்து, ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

இதற்கு இடையே மனுதாரர் மலர்விழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.விஜயபாஸ்கர், குறிப்பிட்ட மறுவாழ்வு மையத்தில் நாராயணனை போல மேலும் பலரும் அடைத்து வைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவதாகவும், அது தொடர்பாக நீதிமன்றம் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், சேலம் அரிசிபாளையம் சாலையில் அமைந்து உள்ள நியூ லைஃப் மீட்பு மையத்தில் சட்டவிரோத காவலில் எவரேனும் வைக்கப்பட்டு உள்ளார்களா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சேலம் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications