மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக கடோச் நியமனம்! 'சிறுநீர் சர்ச்சை' சுப்பையாவுக்கும் குழுவில் இடம்!
சென்னை: மதுரை அருகே அடிக்கல்நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். எய்ம்ஸ் குழுவில், மூதாட்டி வீட்டில் சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கிய டாக்ட்ர் சுப்பையாவும் இடம் பெற்றுள்ளார்.
மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்பின்னர் எந்த ஒரு நடவடிக்கையுமே மேற்கொள்ளப்படவில்லை என்பது பொதுமக்களின் ஆதங்கமாக இருந்தது.

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார் வி.எம். கடோச்.



மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர்கள் பங்கஜ் ராகவ், வனஜாக்ஷம்மா, பிரசாந்த் லாவனியா மற்றும் சண்முகம் சுப்பையா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கியவர்தான் சென்னை மருத்துவர் சண்முகம் சுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications