பாஜக ஆளும் மாநிலங்களும் தவிக்கின்றன.. நிதிஒதுக்கீட்டில் வேகம் தேவை.. தாராளம் காட்டட்டும் மத்திய அரசு
மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்
சென்னை: 2வது கட்டமாக ஒதுக்கியிருக்கும் நிதிகூட போதாது என்ற புலம்பல்கள் மாநிலங்களில் இருந்து எழ தொடங்கி உள்ளன.. போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் இருப்பதால் பாஜகஆளும் மாநிலங்களே திணறுவதாக சொல்கிறார்கள்.
Recommended Video
முதல்கட்டமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா நிதி அறிவித்தபோதே நமக்கு அது யானை பசிக்கு சோளப்பொறியாக இருந்தது.
உபி உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் ஓரளவுகூட தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை என்று பகிரங்கமாகவே எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

பிரதமர்
இதுவரை 4 முறை வீடியோ கான்பரன்சில் பிரதமரிடம் மாநில முதல்வர்கள் பேசியுள்ளனர்.. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த தங்கள் மாநில பிரச்சனைகளையும், அதை சமாளிப்பதற்கான நிதியுதவியையும் நேரடியாகவே கேட்டனர்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதை தொடர்ந்து வலியுறுத்தியபடியே வருகிறார்.. நிதியுதவி மட்டுமில்லை, பிசிஆர் கிட்-களும் நமக்கு அதிகம் தேவைப்படுவதாக சொல்லி வருகிறார்.. எப்போதோ நாம் ஆர்டர் கொடுத்தும் இன்னும் அது நம் கைக்கு வந்தும் சேரவில்லை.

மருத்துவ பரிசோதனை
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் நிறைய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.. அதற்கான மையங்களும் நிறைய உள்ளன என்பதை மறுக்க முடியாது.. ஆனாலும் பரிசோதனை கருவிகள் நமக்கு குறைவாக உள்ளன.. சென்னை போன்ற இடங்களுக்கே அது போதாமல் உள்ளது.. இந்நிலைமையை விலாவரியாக முதல்வர் எடுத்து சொல்லியும் அது குறித்த நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை.

பாஜக ஆளும் மாநிலங்கள்
ஒதுக்கப்பட்டுள்ள நிதி நிச்சயம் நமக்கு போதாது.. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படுவதாக ஒரு பேச்சு எழுந்தாலும், போதிய நிதியை அரசு ஒதுக்காமல் இருப்பதால் பாஜகஆளும் மாநிலங்களே திணறுகின்றன என்பதே தற்போதைய உண்மை. அந்த மாநிலங்களுக்கே இந்த நிலை என்றால், பிற மாநிலங்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை... அதனால் கொரோனா ஒழிப்பு போரில் ஈடுபட்டுள்ள அனைத்து மாநிலங்களுக்குமே மத்திய அரசு விரைந்து தாராள உதவியை செய்ய வேண்டும்.. நோய் தொற்று பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை தர வேண்டிய நிலை உள்ளது.

பொருளாதார சரிவு
பொருளார சரிவு, வருவாய் இழப்பு, மந்த நிலை போன்ற எத்தனையோ இடர்களுக்கு நடுவே மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியும் கிடுக்கிப் பிடி போட்டு கண்காணிக்க வேண்டும்.. இப்போதைய அபாயகரமான சூழலில் ஒதுக்கும் நிதி அத்தனையும் பல உயிர்களை காக்கக்கூடியது.. இவ்வாறு நிதியை ஒதுக்கினால், அந்தந்த மாநில அரசுகளும் விரைவாக செயல்டும்.. மக்களும் பலன் அடைவர்.. கொரோனா போரிலும் வெல்ல முடியும்.

பிரதமர் மோடி
ஒருவேளை இது நடந்தால், நிச்சயம் இந்த நல்ல பெயர் அத்தனையும் மத்திய அரசுக்கே குறிப்பாக பிரமருக்கே போய் சேரும்.. அதனால் நிதியுதவியை தாமதிக்காமல் மத்திய அரசு உதவ முன்வரவேண்டும்.. நிதியை ஒதுக்காவிட்டால் எத்தனையோ மாநில அரசுகள் தர்மசங்கடத்துக்கு ஆளாக நேரிடும்.. இதனால் மக்களின் நம்பிக்கையையும் விரைவில் இழந்துவிடக்கூடும் சங்கடமும் ஏற்படும் என்பதையும் மறுக்க முடியாது!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications