நானும் ரவுடிதான்.. மலேசிய தூதுவரானதும் எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டேன்.. கெத்து காட்டும் சாந்தினி
சென்னை: கல்லூரியில் படிக்கும் போது நான் பெரிய ரவுடிதான். நான் மலேஷியா தூதுவரான பிறகு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறேன் என நடிகை சாந்தினி தெரிவித்துள்ளார்.
நடிகையும் மலேசிய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரியுமான சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் தெரிவித்துள்ளார். அவருடன் 5 ஆண்டுகள் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மணிகண்டனிடம் விசாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சாந்தினியும் அவருக்கு கருக்கலைப்பு செய்த கோபாலாபுரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் அருணுடன் அவர் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சாந்தினி
அந்த ஆடியோவில் சாந்தினி, அருணிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்து பேசியுள்ளார். அதிமுக ஆட்சியில் பேசப்பட்ட அந்த ஆடியோவில் சாந்தினி, டாக்டர் அருணிடம் கூறுகையில், நான் ஒன்று ரோட்டில் நிற்கும் பெண் கிடையாது. தூதரகத் தொடர்புடன் அரசு பதவியில் இருப்பவர். நான் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.

புகார்
நான் அவருடன் பேசினால் எனக்கு முறையாக பதில் அளிப்பதே இல்லை. இதனால் சென்னைக்கு வந்து அனைத்து ஆதாரங்களையும் வைத்து முதல்வரிடம் புகார் அளிப்பேன். கருக்கலைப்பு செய்த காரணத்தினால் உங்களுடயை பெயரை நான் எந்த வகையில் இழுக்க மாட்டேன். மணிகண்டனுக்காக மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை, வேண்டுதல்களை செய்தேன்.
Recommended Video

அவதூறு
இதனால் எனது எடை குறைந்தது. ஆனால் நான் பலருடன் தவறாக பழகியதால்தான் எனது உடல் எடை குறைந்ததாக மணிகண்டன் அவதூறாக பேசினார். அமைச்சர் பதவி போக போகிறது என்பதை முன்கூட்டியே தெரிவித்தேன். ஆனால் அவர் நம்பவில்லை. மணிகண்டன் யாருக்கும் எந்த உதவியையும் செய்யாத அளவுக்கு மோசமானவர்.

அமைதி
கல்லூரி காலத்தில் நான் மிக பெரிய ரவுடி. நான் மலேசிய தூதுவரான பிறகு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்கிறேன். அமைச்சர் மணிகண்டன் என்னை தொடர்பு கொள்ளாவிட்டால் பரவாயில்லை. என்னை பலர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவ்வளவு ஏன் மலேசிய நாட்டு ராஜாவே என்னை பின் தொடர்கிறார் என சாந்தினி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications