Chandra Grahan: சென்னையில் வானில் தெரிந்த சிவப்பு நிலா.. சந்திரகிரகணம்! ரெட்மூனை கண்டு ரசித்த மக்கள்
சென்னை: நடப்பு ஆண்டின் முதல் முக்கிய வானியல் நிகழ்வாக இன்று முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. தமிழகத்தின் கிழக்கு கடலோர மாவட்டங்களில் சரியாக மாலை 6.20 மணியளவில் ரெட் மூன் தென்பட தொடங்கியது. சென்னையில் மாலை 6.20 மணி முதல் 6.30 மணி வரை முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. மக்களும் மாடியின் நின்றபடி வெறும் கண்களாலேயே பார்த்து ரசித்தனர்.
இதேபோல் மும்பை, டெல்லி என நாட்டின் பல்வேறு நகரங்களில் முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவினை மக்கள் கண்டு ரசித்தனர்.

முழு சந்திர கிரகணம்
நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் முக்கிய வானியல் நிகழ்வாக முழு சந்திர கிரகணம் இன்று வானில் தெரிந்தது. பூமி, சூரியன், நிலா ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அதாவது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த நேரத்தில் பூமியின் நிழல் நிலாவினை முழுமையாக மறைக்கும். அப்போது பூமி மீது விழும் சூரிய ஒளி சிதறி நிலாவில் மிளிரும். இதனால் நிலாவானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். சிறிது சிறிதாக நிலவின் மீது ஒளி படும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சென்னையில் கண்டு ரசித்த மக்கள்
கால்வட்டம், அரைவட்டம் என பெரியதாக மாறி இறுதியில் முழு நிலவாக நிலா காட்சியளிக்கும். இந்த நிகழ்வானது நாடு முழுக்க இன்று மாலை 6 மணியளவில் நிகழக்கூடும் என கூறப்பட்டிருந்தது. தமிழகத்திலும் மக்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இதனால் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள், வானியல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் மாலை நேரத்தில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து சந்திர கிரகணம் நிகழ்வதை கண்டனர். சென்னையை எடுத்துக்கொண்டால் சரியாக மாலை 6.20 மணியில் இருந்து 6.30 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது.
தெளிவாக தென்பட்ட ரெட் மூன்
இதனை மக்கள் வெறும் கண்களாலேயே கண்டு ரசித்தனர். ஒருசிலருக்கு முழு நிலவு மட்டுமே சிவப்பு நிறத்தில் தெரிந்ததாகவும் கூறினர். முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியவில்லை ஆனால் சிவப்பு நிலாவை காண முடிந்ததாக கூறினர்.
சென்னை மட்டும் இன்றி தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சந்திர கிரகணத்தை மக்கள் கண்டுகளித்தனர். குறிப்பாக கிழக்கு கடலோர மாவட்டங்களில் "ரெட் மூன்" தெளிவாக தென்பட்டது. வானியல் ஆர்வலர்கள் இந்த நிகழ்வை தொலைநோக்கிக் கருவிகளின் மூலம் பதிவு செய்தனர்.
இதேபோல் மும்பை, டெல்லி என நாட்டின் பல்வேறு நகரங்களில் முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவினை மக்கள் கண்டு ரசித்தனர்.












Click it and Unblock the Notifications