'நீங்கள் செல்லலாம்,உங்களை கமிஷனர் ஆஜர்படுத்துவார்..' இன்ஸ்பெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த மாஜிஸ்ட்ரேட்
சென்னை: கொலை விசாரணை வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சென்னை நீலாங்கரையில் கடந்த 2010ஆம் ஆம் ஜூலை 4ஆம் தேதி இரண்டு தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
அந்த மோதலில் இரும்பு ராடால் தாக்கியதில் பீகாரைச் சேர்ந்த பங்கஜ்குமார் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாணவர் கொலை
இது குறித்து, நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 30 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி நீஷாந்த் என்பவரை, இதுவரை நீலாங்கரை போலீசார் கைது செய்யாமல் உள்ளனர். இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, நீலாங்கரை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆஜராகாத போலீஸ்
இந்நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி ஐயப்பன் முன்னிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் வேறொரு போலீஸ்காரர் ஆஜரானார். இன்ஸ்பெக்டர் இரவு ரோந்தில் இருந்ததால் ஆஜராகவில்லை என்று நீதிபதியிடம் விளக்கம் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் விளக்கம்
இந்த பதிலால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவைச் சென்னை மாநகர கமிஷனர் சங்கர்ஜிவால் நிறைவேற்றவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலையில், நீதிபதி ஐயப்பன் முன்பு ஆஜரான இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், அனுபவம் இல்லாத போலீஸ்காரர் தன்னை பற்றித் தவறுதலாகக் கூறிவிட்டார் எனத் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் விளக்கம்
இந்த பதிலால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவைச் சென்னை மாநகர கமிஷனர் சங்கர்ஜிவால் நிறைவேற்றவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலையில், நீதிபதி ஐயப்பன் முன்பு ஆஜரான இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், அனுபவம் இல்லாத போலீஸ்காரர் தன்னை பற்றித் தவறுதலாகக் கூறிவிட்டார் எனத் தெரிவித்தார்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications