சென்னைக்கு புது ஆபத்து! 1500 காகங்கள் பலி: உயிருக்கே உலை வைக்கும் ஆஃப் பாயில்? தமிழக அரசு சொல்வதென்ன
சென்னை: கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியில் காகங்கள் அதிக அளவில் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக எல்லைப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பறவைக் காய்ச்சல் அதாவது H5N1 இருப்பது கண்டறியப்பட்டது.

சென்னை காகங்கள்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 1,500-க்கும் மேற்பட்ட காகங்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன.. இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது... இது மனிதர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதால், மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் தமிழக தலைமைச் செயலாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்தக் கடிதத்தில், பறவைக் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காகங்கள் இறந்து கிடந்த அடையாறு, பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இறந்த பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொத்து கொத்தாக உயிரிழப்பு
மேலும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், கோழிப் பண்ணைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. காகங்கள் அல்லது இதர பறவைகள் கொத்துக் கொத்தாக உயிரிழப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதோடு, இறந்த பறவைகளை குறைந்தது 8 முதல் 10 அடி ஆழத்தில் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேகவைத்து உண்ணுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஃப் பாயில் உயிருக்கே உலை
குறிப்பாக "ஆஃப் பாயில்" மற்றும் பச்சையாக முட்டைகளை சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளை தற்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சரியாக சமைக்கப்படாத இறைச்சி மூலம் வைரஸ் மனித உடலுக்குள் நுழைய வாய்ப்புள்ளதால், உணவகங்கள் மற்றும் வீடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்..
தமிழகத்தை பொறுத்தவரை, ஓசூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
தமிழக சுகாதாரத்துறை
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், இறைச்சியைக் கையாளும்போது சுகாதாரமான முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், காகங்கள் அல்லது பறவைகள் ஏதேனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறவை இறைச்சி கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பறவைகளை நேரடியாக கையாளுபவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிகுறிகள் - அலர்ட்
தங்கள் பகுதிகளில் காக்கை, புறா உள்ளிட்ட ஏதேனும் பறவைகள் கூட்டமாகவோ அல்லது அசாதாரணமான முறையிலோ இறந்து கிடப்பதை கண்டால், உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு இந்த தொற்று பரவும் பட்சத்தில் கடுமையான காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும். இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்கள் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு வார்டுகள் மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications