கொரோனா களப்பணியில் தன்னார்வலர்கள்.. ஊக்கம் அளிக்க ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசு
சென்னை : கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சியால் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தனை நாட்களாக வேலையில்லாமல் பணமுமின்றி உணவுக்காக நிறைய பேர் அவதிப்பட்டனர்.
மாநில அரசும் உதவித்தொகை, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை செய்த போதிலும் அது போதுமானதாக இல்லை. இதனால் உணவில்லாதவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க சில தன்னார்வலர்கள் முன்வந்தனர். தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ஏழை, எளிய மக்களை கண்டறிந்து உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் வழங்கி வந்தனர்.

உதவித்தொகை
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் தன்னார்வலர்களும் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்களின் சேவையை ஊக்கமளிக்கும் வகையில் அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

ஆலோசனை
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையர் பிரகாஷ் தலைமையில் அம்மா மாளிகை அரங்கில் நடைபெற்றது.

நடவடிக்கை
இந்த கூட்டத்தில் 40 தன்னார்வல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 650 குடிசை பகுதிகள் உள்ளன. அது போல் 500-க்கும் மேற்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் மேற்கண்ட குடிசை பகுதிகளுக்கும் அத்தியாவசிய தேவைகளை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி பணியாளர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் முடிவு
இந்த பகுதிகளில் காய்ச்சல் போன்ற நபர்களை கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்டுப்படுத்த பகுதிகளில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு தேவையான முகக் கவசம், கையுறை, முழு உடற்கவசம் மற்றும் ஊக்கத் தொகை ஆகியவை மாநகராட்சியால் வழங்கப்படும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications