குப்பையில் இருந்தும் சம்பாதிக்கலாம்.. கூடவே விவசாயிகளுக்கும் ஜாக்பாட்! சென்னை மாநகராட்சி மெகா பிளான்
சென்னை: தலைநகர் சென்னையில் கழிவுகள் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், இதைச் சரி செய்யச் சென்னை மாநகராட்சி பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் குப்பைகள் தான் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சென்னையில் ஒவ்வொரு நாளும் பலர் புதிதாகக் குடியேறி வரும் நிலையில், இங்கே மக்கள்தொகையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் சென்னையில் உற்பத்தியாகும் கழிவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கழிவுகள் எல்லாம் நகரில் இருக்கும் குப்பைக் கிடங்குகள் பக்கமே செல்கிறது. இது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது.
பிரச்சினை: ஆனால், கவலை வேண்டாம். சென்னை மாநகராட்சிக்கு விடிவு காலம் வரப்போகிறது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நகரின் இரண்டு பெரிய குப்பைக் கிடங்குகளில் குப்பை கொட்டுவதை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சென்னை மாநகராட்சி.. குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குப்பைகளைக் கையாள்வதில் புதுமையான நடவடிக்கைகளைப் புகுத்துவதன் மூலம் இதைச் செய்ய உள்ளதாகக் கூறுகிறார் சென்னை கமிஷ்னர் ஜெ ராதாகிருஷ்ணன்.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "2001இல் சென்னையில் ஒரு நாளைக்கு 2,500 டன் கழிவுகளைக் கையாள வேண்டி இருந்தது. இப்போது தினசரி சென்னையில் கழிவின் அளவு 6,150 டன்களாக அதிகரித்துள்ளது.. ஆனால், மாநகராட்சியால் இப்போது தினசரி 1,800 டன் கழிவுகளை மட்டுமே கையாள முடிகிறது.
குப்பைக் கிடங்குகள்: 2000-01ஆம் ஆண்டில், பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்படும் மாசை குறைக்கும் ஆப்ஷன்களை சென்னை மாநகராட்சி ஆய்வு செய்தது. அங்குத் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டுவது தீர்வு இல்லை.. இப்போது 20 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மாறிவிட்டது, மக்களிடையே கூட விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
கழிவுகளை கையாள்வது மக்களின் பொறுப்பு என்பதை அவர்களை உணர வைத்து நாம் அதை மக்கள் இயக்கமாக மாற்றாத வரை கழிவுகளை கையாள்வதில் சிறந்த நிலையை அடைய முடியாது" என்று அவர் தெரிவித்தார்.
நடவடிக்கை தேவை: நகரில் உற்பத்தியாகும் கழிவுகளைக் குப்பை கிடங்குகளில் கொட்டுவதால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. எவ்வளவு பெரிய குப்பைக் கிடங்காக இருந்தாலும் அதுவும் ஒரு கட்டத்தில் நிரம்பவே செய்யும். எனவே, குப்பைகளை பிராசஸ் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையைச் சென்னை மாநகராட்சி இப்போது எடுத்து வருகிறது.
வரும் 2030இல் சென்னையில் குப்பைகளை பிராசஸ் செய்யும் நமது திறன் என்பது இங்கே உற்பத்தியாகும் கழிவுக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது நகரில் உற்பத்தியாகும் 90% கழிவுகள் முறையாக பிராசஸ் செய்யப்படும் என்றும் வெறும் 10%க்கும் குறைவான கழிவுகள் மட்டும் குப்பைக் கிடங்கிற்குச் செல்லும் என்றும் நகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குப்பையில் இருந்து நிதி: நகரில் இப்போது சில இடங்களில் குப்பைகளில் இருந்து உரத்தைத் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அதன்படி நம்ம ஊரு அறக்கட்டளை புதுப்பேட்டை, கண்ணம்மாபேட்டை போன்ற பகுதிகளில் மாநகராட்சியிடம் இருந்து 30 டன் குப்பைகளைப் பெற்று அதில் இருந்து 10 டன் உரத்தை உற்பத்தி செய்து வருகிறது.

இந்த உரம் ஒரு கிலோ ₹7க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இதை வாங்க விவசாயிகளும் ஆர்வம் காட்டுகிறார்களாம். இதனால் இதுபோன்ற அதிக மையங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லாப நோக்கமின்றி செயல்படும் இதுபோன்ற மையங்களால் ஒரு பக்கம் குப்பைகளும் எளிதாக பிராசஸ் செய்யப்படுகிறது. மறுபுறம் விவசாயிகளுக்கும் குறைந்த நிலையில், உரம் கிடைக்கிறது.
குப்பையைப் பணமாக மாற்றும் ஒரே ஒரு வழிதான் இது. இதுபோல கழிவுகளில் இருந்து பணத்தை ஈட்டப் பல வழிகள் இருக்கிறது. அப்படி செய்தால் நகரில் குப்பை கிடங்குகளுக்கு செல்லும் குப்பையும் பெருமளவு குறையும். அதேபோல இவை மாநகராட்சிக்கும் ஒரு நிதி அதரமாக மாறும்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications