'ப்ரையன்' ஆக மாறி முடங்கி போன குஷ்பு கணக்கு.. முடக்கியது யாரு.. ட்விட்டருக்கு சென்னை போலீஸ் லெட்டர்
சென்னை : குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு 'ப்ரையன்' என்று பெயர் மாற்றப்பட்டது. அவரது புகைப்படங்கள் அடங்கிய ஏராளமான ட்வீட்கள் அழிக்கப்பட்டதுடன் அவரது கணக்கில் இருந்து சில பதிவுகளும் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிஜிபியிடம் குஷ்பு புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் எனக் கேள்வி எழுப்பி ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதி உள்ளது.
நடிகை குஷ்பு ட்விட்டரில் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருபவர். தினசரி அவரது கணக்கில் இருந்து பதிவுகள் வரும். அரசியல் தொடர்பாக, சினிமா தொடர்பாக பல்வேறு கருத்துககளை வெளியிட்டு வந்தார். அவரது பழைய ட்வீட்கள் பல ஆளும் பாஜக அரசையும். இப்போதைய ட்விட்கள் எதிர்க்கட்சியான காங்கிரஸையும் , திமுகவையும் விமர்சித்து இருந்தன.

குஷ்பு கணக்கு
இந்த நிலையில் அண்மையில் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட்டது. அந்த கணக்க 'ப்ரையன்' என்கிற பெயருக்கு மாற்றப்பட்டது. மேலும் பல்வேறு தேவையற்ற ட்வீட்கள் அவரது கணக்கிலிருந்து தொடர்ச்சியாக வந்தன.

குஷ்பு கவலை
குஷ்பு ட்விட்டர் கணக்கில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாத அளவிற்கு அவரது ட்வீட்கள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டிருந்தன. குஷ்புவால் மீண்டும் கணக்கில் நுழைய முடியாத அளவிற்கு பாஸ்வேர்டுகள் மாற்றி ஹேக்கர்கள் அட்டூழியம் செய்துவிட்டார்கள்

குஷ்பு புகார்
இதையடுத்து ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஜிபிசைலேந்திர பாபுவை சந்தித்து குஷ்பு முறையிட்டார். இதேபோல் ம் சைபர் கிரைமிலும் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சைபர் கிரைமுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

ட்விட்டருக்கு கடிதம்
இதையடுத்து குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் எனக் கேள்வி எழுப்பி ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதி உள்ளது. இதனிடையே குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தை பழையபடி மீட்டெடுத்துவிட்டார்.

கடும் விவாதம்
பிரதமர் மோடி தானே குடையை பிடித்த படி பேட்டி கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டதுடன், அந்த புகைப்படத்துடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா ஆகியோருக்கு மற்றவர்கள் குடை பிடிக்கும் புகைப்படத்தையும் கடந்த 20ம் தேதி பகிர்ந்தார். இந்த ட்வீட் வைரலானது. ஆனால் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications