சென்னை பாஜக மாவட்ட செயலாளர் கைது.. பெண் நிர்வாகியை ஏமாற்றிய வழக்கில் அதிரடி.. பரபரப்பு
சென்னை: சென்னையில் ரயில் நிலையத்தில் கடை வைக்க அனுமதி பெற்று தருவதாக கூறி பாஜகவை சேர்ந்த பெண்ணிடம் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் இரண்டரை லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். இதனால் அந்த பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பாஜக மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நேதாஜி நகர் மெயின் தெருவில் வசித்து வருபவர் நவமணி. இவர் பாஜக கட்சியில் செயல்பட்டு வருகிறார். திருமணம் ஆனவர். பாஜகவை சேர்ந்தவர் என்பவர் மாவட்ட செயலாளர் செந்தில் என்பவர் நவமணிக்கு பழக்கம் ஆனார். இந்நிலையில் தான் தனது குடும்ப சூழலை அவரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து செந்தில் அவருக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் தன்னிடம் இரண்டரை லட்சம் தந்தால்
ரயில் நிலையத்தில் கடை வைக்க அனுமதி பெற்று தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய நவமணி அவரிடம் கடந்த 2022 ம் ஆண்டு இரண்டரை லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை பெற்று கொண்ட செந்தில், நவமணிக்கு கடை வைக்க அனுமதி பெற்று கொடுக்கவில்லை. இதுபற்றி நவமணி கேட்டதற்கு அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் மனமுடைந்த நவமணி இரண்டரை லட்சம் ரூபாயை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆனால் செந்தில் பணத்தை கொடுக்காமல் அவரை திட்டியும், மிரட்டியும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த நவமணி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நவமணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் நவமணி தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக தகவல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நவமணியிடம் விசாரணை நடத்தினர். அதோடு தற்கொலைக்கு முயற்சிக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் நவமணி தன்னுடைய தற்கொலைக்கு காரணம் செந்தில் தான் எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த தண்டையார்பேட்டை போலீசார் செந்திலை கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை சஞ்சீவி ராயன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் இருந்த செந்திலை போலீசார் கைது செய்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற நவமணி தற்போது சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சென்னை பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications