ஈசிஆர் மது விருந்து.. ஒரே நைட்டில் 14 லட்சத்தை குவித்த ரிசார்ட்?.. நள்ளிரவில் நடந்தது என்ன?
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் விடிய விடிய மது விருந்து நடத்தப்பட்ட நிலையில் பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை அமைதியான சூழலில் கடல் அலைகள், கடல் காற்றுடன் மென்மையான சூழலை தரும். இதனால் பெரிய பெரிய பணக்காரர்கள் இந்த பகுதிகளில் பண்ணை வீடுகளையோ பங்களாக்களையோ வாங்கிக் குவிப்பார்கள்.
சென்னையில் வெயில் அதிகமாக இருக்கும் கோடை காலங்களில் இந்த ஈசிஆர் வீடுகளில் தங்கள் பொழுதை கழிப்பர். அது மட்டுமல்லாமல் இந்த பகுதிகளில் ஏராளமான ரிசார்டுகள், பொழுதுபோக்கு மையங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

வார இறுதி நாட்கள்
ஆங்கில புத்தாண்டு, வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் இங்குள்ள ரிசார்டுகள் நிரம்பி வழியும். அது போல் இங்கு சில ரிசார்டுகளில் அனுமதியின்றி மது விருந்து நடத்தப்படுவதாகவும் தெரிகிறது. அந்த வகையில் பனையூரில் ஒரு முக்கிய அரசியல் புள்ளிக்கு சொந்தமான ரிசார்ட்டில் நேற்று அதிகாலை மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

50 பெண்கள்.. 500 ஆண்கள்
இந்த சோதனையில் சட்டவிரோதமாக மது விருந்து, ஆடல் பாடலுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாக 50 பெண்கள் உள்பட 700 ஆண்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். விடிய விடிய மது விருந்தில் கலந்து கொண்டதாக பிடிபட்ட அவர்களிடம் பெயர், விலாசம் உள்ளிட்ட தகவல்களை போலீஸார் கேட்டு பெற்றனர். இதனால் அந்த பகுதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சைமன் கைது
இந்த நிகழ்ச்சிக்கு தனியார் நிறுவன மேலாளர் சைமன் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவ, மாணவிகள் என்ற தகவலை கேட்டு போலீஸார் அதிர்ந்தனர். மேலும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் என தெரியவந்தது.

ரூ 10 லட்சம் வசூல்
இந்த கல்லூரி மாணவிகளிடம் ரூ 1500 முதல் ரூ 2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பார்ட்டியை நடத்தியவர் 10 லட்சம் ரூபாய் முதல் 14 லட்சம் ரூபாய் வரை ஒரே நாளில் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ரிசார்ட்டில் இருந்து வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட் உள்பட பல்வேறு போதை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

எச்சரிக்கை கடிதம்
இதையடுத்து பிடிபட்ட அனைவரையும் எச்சரித்து கடிதம் எழுதி வாங்கிகொண்டு அவர்களை அனுப்பினர். முன்னதாக போலீஸார் வருவதை கண்ட பலர் தங்களது இரு சக்கர வாகனங்கள், கார்களை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என்று அடையாளம் காணும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications