Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக எம்பி, எம்எல்ஏக்கள் மீதான நிலுவை வழக்கு எவ்வளவு? அரசுக்கு சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு ஏப்ரல் வரை கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் எம்பி, எம்எல்ஏக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கு சிறப்பு நீதிமன்றம் உள்பட பிற நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Chennai HC given time till April to TN government for the details of pending cases against MLAs and MPs

தமிழ்நாட்டிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தான் தமிழக எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீது சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை கண்காணிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த முறை இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் நிசார் அஹமது, சில மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆஜராகியுள்ளதால், நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட இயலாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அவருக்கு பதிலாக, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனை நீதிமன்றத்துக்கு உதவியாக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளின் விவரங்களை சேகரித்துள்ளதாகவும், மற்ற வழக்குகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் தங்களுக்கு வழக்குகளின் விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+