அதிக பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்து.. முக்கிய உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்
சென்னை: அதிக பாரம் ஏற்றிவரும் கன்டெய்னர் லாரிகளை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறும் லாரிகளுக்கு விதிகளை வகுக்க குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த குழு அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னையை சேர்ந்த ஜே.எஸ். துறைமுக கன்சார்டியம் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், 'தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய துறைமுகங்களுக்கு வரக்கூடிய கன்டெய்னர் லாரிகள் மோட்டார் வாகன சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றுகின்றன.

இதனால் சென்னையில் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் அதிக பாரம் ஏற்றுவது ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதாவது 6 சக்கர வாகனம் கொண்ட கன்டெய்னர் லாரிகள் 13.5 டன் எடையும், 12 சக்கரம் கொண்ட லாரிகள் 41 டன் எடை மட்டுமே ஏற்ற வேண்டுமென மோட்டார் வாகன விதிகள் உள்ள நிலையில், அதைவிட கூடுதலாக ஏற்றப்படும் டிரெய்லர்களை துறைமுகத்தில் அனுமதிக்கின்றனர் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
பல இடங்களில் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பலர் இன்னலுக்கு ஆளாவதால், எடை ஏற்றுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது அவர் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர், கண்டெய்னர் பராமரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டுமென சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவருக்கு உத்தரவிட்டார்.
அந்த கூட்டத்தில் அதிக பாரம் ஏற்றிவரும் கன்டெய்னர் லாரிகளை கண்காணிக்கவும், சம்மந்தப்பட்ட லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான விதிகளை வகுக்க குழு அமைக்க வேண்டும் எனவும், அந்த குழு அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறைகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 27- ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications