Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் லைசென்ஸ் கேட்ட டிடிஎஃப் வாசன்.. மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

Chennai HC Rejects TTF Vasan s Plea for Reinstatement of Driving Licence

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் டிடிஎஃப் வாசனின் யூடியூபை மூடிவிட்டு, அவரது விலையுயர்ந்த பைக்கை எரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். பின்னர் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.

இதற்கிடையே அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் ஒரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். இந்த ரத்து 06.10.2023 முதல் 05.10.2033 வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்றில்லை, உரிய அதிகாரிகளை அணுகலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்தாலே புதிய லைசென்ஸ் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என டிடிஎஃப் வாசன் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து, டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+