Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 திமுக அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து? ஊழல் வழக்குகளை இன்று முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணையை தொடங்க இருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

 Chennai HC to hear about 3 DMK ministers DA case today

இந்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மதுரை கிளை நீதிமன்றத்திற்கு 3 மாதங்களுக்கு வழக்கமாக நடைபெறும் பணி மாறுதலாகி சென்றார்.

இதையடுத்து மேற்கண்ட வழக்குகளை நீதிபதி ஜெயசந்திரன் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மதுரை கிளை நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டார். இதையடுத்து எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை அவர் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

அந்த வகையில் அவர் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+