Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“விளம்பரம்”.. 76 புத்தகங்களை நீங்க படிச்சீங்களா? சவுக்கு சங்கர் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கேள்வி

கடலூர் சிறை கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூர் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதி கேட்டு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் விளம்பர நோக்கத்துடன் மனு தாக்கல் செய்ததாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிறைவாசிகளுக்கு வழங்கும் 76 புத்தகங்களையும் நீங்கள் படித்து உள்ளீர்களா எனவும் சவுக்கு சங்கரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

முன்னாள் அரசு அதிகாரியான சவுக்கு சங்கர் பல்வேறு யூடியூப் சேனல் நேர்காணல்களில் அரசியல், சட்டம் ஒழுங்கு சார்ந்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். வெளிப்படையாக இவர் தெரிவித்து வரும் கருத்துக்களால் இவரது பேச்சுக்களுக்கு மக்கள் வரவேற்பும் கிடைத்தது.

பாரதிய ஜனதா கட்சி, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை இவர் தெரிவித்து வந்தார். சமீப காலமாக திமுக மீதும் தமிழ்நாடு அரசு மீதும் இவர் தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக கூறப்படுகிறது.

மாரிதாஸ் கருத்து

மாரிதாஸ் கருத்து

இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து "திமுக ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா?" என்று கேள்வி எழுப்பி சர்ச்சைக்குரிய பதிவை பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்டார்.

வழக்கு தள்ளுபடி

வழக்கு தள்ளுபடி

அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தார். இதனை சுட்டிக்காட்டிய சவுக்கு சங்கர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது யூடியூப் சேனலில் குற்றம்சாட்டினார்.

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு

சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு

இதனை அடுத்து அவர் மீது உயர்நீதிமன்ற மதுரை தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. நீதிபதி சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த நவம்பர் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் வழக்கு

சவுக்கு சங்கர் வழக்கு

இந்த நிலையில் கடலூர் சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக புத்தகங்களை வழங்க அனுமதி கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 76 புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து அதனை பெற்றுக்கொள்ளுமாறு சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினேன்.

புத்தகங்களை வழங்க வேண்டும்

புத்தகங்களை வழங்க வேண்டும்

ஆனால் அரசியல் காரணங்களால் தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத்துறை மறுத்து விட்டதாகவும் மனுவில் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தமது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கு தள்ளுபடி

வழக்கு தள்ளுபடி

அப்போது நீதிபதி, "இந்த புத்தகங்களை நீங்கள் படித்திருக்கீர்களா? கைதிகளின் வாழ்க்கைக்கு இந்த புத்தகங்கள் உதவும் என எவ்வாறு கூறுகிறீர்கள்." என கேள்வி எழுப்பினார்.விளம்பர நோக்கத்திற்காக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன் புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக்கூறி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+