ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஊட்டிக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களும் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உதகை, உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
உள்ளூர் வாகனங்கள், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு; இந்த உத்தரவுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும்.
மலை அடிவாரத்தில் இருந்து நகரங்களுக்கு செல்ல மினி மின்சார பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு இ பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பர்டுள்ளது.
மேலும், உதகை, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்த வழக்கு ஏப்ரல் 25 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications