ஓ பன்னீர் செல்வத்துக்கு அடுத்த அடி.. சிவி சண்முகம் வசம் செல்லும் அதிமுக அலுவலக பொருட்கள், ஆவணங்கள்!
சென்னை: கடந்த ஆண்டு ஜூலை 11ல் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறையில் ஓ பன்னீர் செல்வம் அணியினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அதிமுக அமைப்பு செயலாளர் சிவி சண்முகத்திடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். தற்போது அதிமுக அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
முன்னதாக சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு நடந்தது. இந்த வேளையில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மோதல் வன்முறையானது.

இதையடுத்து அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், பொருட்களை ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் எடுத்து சென்றனர். இதுபற்றி அதிமுக அமைப்பு செயலாளர் சிவி சண்முகம் சென்னை ராயப்பேட்டை போலீசாரில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓ பன்னீர் செல்வம் எடுத்து சென்ற பொருட்கள், ஆவணங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொருட்களை எல்லாம் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் தான் இந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சிவி சண்முகம் மற்றும் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதாவது இந்த பொருட்களை எல்லாம் கேட்ட அதிமுக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து அதிமுக, அலுவலகத்தை அதிகாரிக்ள் சீல் வைத்து சாவியை எடுத்துச் சென்று விட்டனர். அதை கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே, இந்த பொருட்களை எல்லாம் எங்களிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்தியலிங்கத்தால் மனு தாக்கல் செய்யபட்டாது. இந்த மனுக்களை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த பொருட்களுக்கு எல்லாம் யார் உரிமையாளர் என்று தற்போது முடிவு செய்ய முடியாது. அதனால், இருவரது மனுக்களும் நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிவி சண்முகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதரார் சார்பாக மூத்த வழக்கில் ஜான் சத்தியன், முகமது ரியாஸ் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் உத்தரவை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சைதாப்பேட்டை நீதிமன்றம் எங்கள் தரப்பிற்கு ஆவணங்கள் மற்றும் பொருள்களை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு குறித்து விரிவான உத்தரவை பின்னர் பிறப்பிப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் தற்போது இந்த பொருட்களும் அவர் வசம் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!












Click it and Unblock the Notifications