Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’ஜெய்பீம்’ சம்பவம்..கோர்ட்டுக்கு போன ராஜகண்ணுவின் தம்பி..! போலீசுக்கு அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்பீம் படத்தின் உண்மை சம்பவத்தில் காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் காவல் துறையினர் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த நிலையில் மாயமான தனது கணவரை மீட்டுத்தரக் கோரி ராஜகண்ணுவின் மனைவி பார்வதி மனு தாக்கல் செய்தார்.

Chennai High Court orders in the case filed by the brother of Rajakannu who died in police attack

இந்த வழக்கில் அப்போது வழக்கறிஞராக இருந்த நீதியரசர் சந்துரு ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல் துறையினருக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் காவல் துறையினருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேபோல, பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இடைக்கால இழப்பீடாக ராஜகண்ணு மனைவிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சிக்கு 50 ஆயிரம் ரூபாயும், ஆச்சியின் மகன் குள்ளனுக்கு 25 ஆயிரம் ரூபாயும், மற்றொரு மகன் குளஞ்சியப்பன் உள்பட ஐந்து பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினர்களான தங்களுக்கு பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி மகன் குளஞ்சியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை மற்றும் நிவாரணங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

Chennai High Court orders in the case filed by the brother of Rajakannu who died in police attack

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை, அரசு வேலை வழங்குவது குறித்த நிலைபாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ராஜகண்ணு மரணத்துக்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி 1993ல் நடத்திய சட்ட போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தான், நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+