Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பெரும்பாலான ஓட்டல்கள் அடுத்தடுத்து வரிசையாக மூடப்பட்டு வருகின்றன.. இதனால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.. சென்னையில் இன்று காலை வணிக சிலிண்டர்கள் 3700 வரை சென்றது. அப்படி கொடுத்தும் கூட வாங்க முடியாத நிலை இருக்கிறது.. சென்னையில் எல்லா இடங்களிலும் மக்கள் சிலிண்டர் இல்லாமல், வீடுகளில் சிலிண்டர் வாங்க முடியாமல் அல்லாடுகிறார்கள். அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் பொதுமக்கள்.

மேற்கு ஆசியாவில் போர் காரணமாக எரிவாயு விநியோகம் தடை பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லை... ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அரசு சிலிண்டர் முன்பதிவுக்கு 25 நாட்கள் ஆகும் என்று அறிவித்துள்ளதால், மக்கள் சிலிண்டர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளார்கள்.. பல்வேறு பெரிய ஓட்டல்களில் நேற்று சிலிண்டர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்று சிறிய ஓட்டல்கள் கூட சிலிண்டர்கள் இல்லாமல் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன.

Chennai is completely paralyzed without hotels restaurants are closing due to cylinder shortage

ஓட்டல்களை நம்பியுள்ள பேச்சுலர்கள் உணவு கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். பெருங்குடி, வேளச்சேரி, தரமணி, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், வடபழனி, அசோக் நகர், அண்ணா நகர், கோயம்பேடு, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வணிக சிலிண்டர் விநியோகம் சுத்தமாக இல்லை. அதிக விலை கொடுத்தாவது வாங்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை.. பெரிய கடைகள் சில மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துள்ளன. சின்ன சின்ன ஓட்டல்கள் சுத்தமாக சிலிண்டர்கள் கிடைக்காமல் அப்படியே மூடப்பட்டு வருகின்றன.

நாளைக்குள் நிலைமை சரியாகாமல் போனால், சாப்பாடு விநியோகமே இல்லாமல் மக்கள் பரிதவித்து போகும் நிலை ஏற்படும். ஓட்டல்களில் பிரச்சனை ஒருபுறம் எனில், வீடுகளுக்கும் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். காத்திருப்பு காலம் 25 நாடகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கலாம் என்று மக்கள் தேடி அலைகிறார்கள்.

ஆனாலும் வீடுகளுக்கு சிலிண்டர் கிடைக்கவில்லை.. சென்னை மக்கள் சிலிண்டர் இல்லாமல் அத்தியாவசியமான உணவுக்கு கூட கிடைக்காமல் அல்லாடும் நிலையில், அரசு உடனே தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வெகு சில கடைகள் மட்டும் தான் இன்னமும் இயங்குகின்றன. மத்திய அரசும், மாநில அரசும் போக்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+