Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு.. மிக கனமழை கொட்ட போகுது.. முக்கிய அலார்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.இதேபோல் 'புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரத்தல் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

12 மாவட்டங்களில்

12 மாவட்டங்களில்

அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

பல மாவட்டங்களில் கனமழை

பல மாவட்டங்களில் கனமழை

அடுத்த 48 மணி நேரத்தில் (09.10.2020) பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதேபோல் அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும், சேலம், நாமக்கல், ஈரோடு கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 9ம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் உருவாகக்கூடும். அதனை அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும்.

சென்னை வானிலை

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசையும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கு அதிக மழை

எங்கு அதிக மழை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குப்பநத்தத்தில் 14 செமீ மழை பெய்துள்ளது. இதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில், மே, மாத்தூரில் தலா 11 செமீ மழை பெய்துள்ளது. விருத்தாச்சலம், வருதாச்சலம், பிளந்துறை ஆகிய ஊர்களில் 9 செமீ மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 8 செமீ, கந்தர்வக்கோட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், நாமக்கல், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்

கடலுக்கு செல்ல வேண்டாம்

அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (10.10.2020) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும். எனவே மீனவர்கள் மத்திய வங்ககடல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். அங்கு மணிக்கு சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதியிலும், ஒடிசா கடல் பகுதியிலும் மீனவர்கள் செல்ல வேணடாம்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+