Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழை காலம் வந்துடுச்சு.. உடனே போனை எடுங்க.. தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு! யாருக்கெல்லாம் பொருந்தும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மழைக்காலம் நெருங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவு சென்னை மக்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முதல்நாள் வெளியிட்ட அறிவிப்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. அதன் தாக்கம் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் வலுவான வடகிழக்கு காற்று வலுப்பெற்ற பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியது.

 Chennai metro released an application to monitor rain complaints and monsoon worries

புயல் உருவானது: அதன்படியே மத்தியமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது.

ஈரான் நாடு பரிந்துரைந்துள்ள 'ஹாமூன்' என்ற பெயர் இந்த புயலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று தீவிர புயலாக வலிமை அடையும். அதி தீவிர புயலாக வலிமை அடையும் முன் இது நாளை நண்பகலில் வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என கணிப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நேரடியாக தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாது. புயல் எதிர் திசையில் நகர்வதால் தமிழ்நாட்டில் பெரிய அளவில் நேரடியாக மழை பெய்யாது.

அதன்படி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த ஒரு வாரத்திற்கு தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

முக்கிய உத்தரவு: தமிழ்நாட்டில் மழைக்காலம் நெருங்கி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவு சென்னை மக்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பருவமழை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சி மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது. மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி தண்ணீர் தேங்குவது மற்றும் விழுந்த மரங்களைப் பற்றிய புகாரளிக்கலாம். அதே நேரத்தில் அதிகாரிகள் இந்தக் புகார்களை கண்காணித்து பதிலளிக்க முடியும்.

வொர்க்ஃபோர்ஸ் ஆப் எனப்படும் இந்த செயலி, பல்வேறு முனிசிபல் ஏஜென்சிகளுக்கான தொடர்புத் தகவல்களையும் கொண்டிருக்கும். இது நீர் நிலைகளை நிகழ்நேர கண்காணிப்பை செய்து வெள்ளத்தை தடுக்க உதவும். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்கும். கூடுதலாக, பல்வேறு குடிமைப் பிரச்சினைகளுக்கான புகார் தீர்வை மையப்படுத்துவதற்காக, இந்த பக்கத்தை அதி நவீன் தொழில் நுட்பத்துடன் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ளது.

இந்த இயங்குதளம் ஆண்டு முழுவதும் செயல்படும் மற்றும் மழை காலத்தில் ஹெல்ப்லைன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வழி வகுக்கும். இது கழிவு மேலாண்மை, சாலை சேதம் மற்றும் விலங்குகள் மரணம் உட்பட 27 வகை புகார்களை அளிக்கும் வசதியை கொண்டது ஆகும். பருவமழை தயார்நிலையை மேம்படுத்த இந்த பக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+