Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில அபகரிப்பு வழக்கு: 40 செம்மரக் கடத்தல் கேஸ் பாஜக பிரமுகர் கே.ஆர்.வெங்கடேஷ் கூட்டாளிகளுடன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகரும் 40-க்கும் மேற்பட்ட செம்மரக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவருமான கே.ஆர்.வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மண்ணடியை சேர்ந்த சுல்தான், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர். அவரிடம் பாடியநல்லூரை சேர்ந்தவர்கள் நிலம் ஒன்றை விற்பனை செய்து தர அணுகியுள்ளனர். இதனடிப்படையில் சுல்தான், அப்பகுதிக்கு சென்று நிலத்தைப் பார்வையிட்டார்.

ஆனால் அந்த நிலம் தங்களுடையது என பாஜக மாஜி ஓபிசி பிரிவு செயலர் வெங்கடேஷ், பாஜகவின் மற்றொரு பிரமுகர் நரேஷ் உள்ளிட்டோர் என மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சுல்தான் தரப்பு போலீசில் புகார் செய்தது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

Chennai Police arrest BJP KR Venkatesh in land grab Case

இந்நிலையில் சுல்தான் புகாரின் பேரில் பாஜக பிரமுகர்களான வெங்கடேஷ், நரேஷ் உள்ளிட்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசிடம் சிக்கிய வெங்கடேஷ் யார் என்பது குறித்து பரபரப்பான தகவல்களும் வெளியாகி உள்ளன.

செம்மரக் கடத்தல்: ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டில் செம்மரம் கடத்தியதாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் வெங்கடேஷ் மீது உள்ளன. ஆந்திராவில் பல முறை செம்மரக் கடத்தில் வழக்கி சிக்கி ஜாமீனில் வெளிவந்தவர் வெங்கடேஷ். அதிமுகவில் கட்சிப் பொறுப்பு வகித்த அவர் பின்னர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் வெங்கடேஷ் இணைந்த போதே, செம்மரக் கடத்தல் மன்னனுக்கு பாஜகவில் இடமா? என சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+