பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சென்னையில் நாளை 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து!
சென்னை: புறநகர் மின்சார ரயில்கள், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும் பராமரிப்பு பணிகளுக்காக புறநகர் மின்சார ரயில்கள் அவ்வப்போது ரத்து செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், நாளை 11 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக நாளை 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், ரத்து செய்யப்பட்டுள்ள புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது.

- சென்னை கடற்கரையில் இருந்து நாளை மாலை 6.45, இரவு 8, 9.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள்
- சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து இருந்து நாளை இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள்
- கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் புறநகர் ரயில்கள்
ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருக்கிறது. இதனால் வடசென்னை மக்கள், தங்களின் பயண ஏற்பாட்டை மாற்றியமைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
வடசென்னையை சென்னையின் மத்திய மற்றும் தென் சென்னையுடன் இணைப்பதில் புறநகர் ரயில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. திருவொற்றியூரில் இருந்து சென்ட்ரல் வர வேண்டும் எனில், பேருந்தில் குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும். ஆனால் புறநகர் ரயில் எனில் 20 நிமிடங்களில் வந்துவிடலாம். அதேபோல, எண்ணூர் மற்றும் எர்ணாவூர் பகுதிகளிலிருந்து சென்னையின் மையத்திற்கு பேருந்தில் வர வேண்டும் என்றாலும் நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் புறநகர் ரயில்கள் விரைவாக கொண்டு வந்து சேர்த்துவிடும்.
ஆனால் சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால், வடசென்னை மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது மக்களை மேலும் பாதிப்படைய செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications