சென்னை மேடவாக்கம் டாஸ்மாக்கில் குரங்கிடம் சேட்டை.. போதையில் கொய்யா ஊட்டியவருக்கு நடந்ததை பாருங்க
சென்னை: சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார். பின்னர் ஒயின் ஷாப் அருகே இருந்த குரங்கு ஒன்றியிடம் ஆசையாக கொய்யாக்காவை ஊட்டி உள்ளார். அப்போது அமைதியாக இருந்த குரங்கு கோபப்பட்டது. சட்டென பாய்ந்த அந்த குரங்கு அவரை கடித்து குதறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரவி வருகிறது.
சென்னையில் குரங்கிற்கு கொய்யாவை ஊட்டி விட முயன்ற போதை ஆசாமி.. மதுபோதையில் தொந்தரவு செய்த நபரின் கையை குரங்கு கடித்த வீடியோ #monkey #chennai pic.twitter.com/NVMI1B7zC8
— velmurugan (@velmurugantheni) November 10, 2025
சென்னையில் நன்மங்கலம் வனப்பகுதியை ஒட்டித்தான் மேடவாக்கம் அமைந்துள்ளது. மொத்தப் பரப்பளவு சுமார் 2,400 ஹெக்டேர் ஆகும். இதில் 320 ஹெக்டேர் தமிழ்நாடு வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. இங்கு 85-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கின்றன. இந்தியப் பெரிய கொம்பு ஆந்தை என்ற அரிய வகை ஆந்தை நன்மங்கலம் வனப்பகுதியில் இருக்கிறது. குள்ளநரி, கீரிப்பிள்ளை, பாம்பு, தவளை, உடும்பு, மற்றும் குரங்குகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன.

இதில் குரங்குகள் இயல்பாகவே மேடவாக்கம் பகுதிக்கு வந்து உணவு தேடுகின்றன. மனிதர்கள் சாப்பிட்டு போடும் உணவுகள், வாழைப்பழம், பழங்கள் மற்றும் உணவுகளை தேடி தேடி உண்ணுகின்றன. இந்த குரங்குள் பொதுவாக தனக்கு பிடித்த பொருள் இருந்தால் பறித்து செல்லவும் தயங்காது. தனக்கு ஆபத்து என்று தெரிந்தால் தாக்கவும் செய்யவும். குரங்குகள் இயல்பாகவே மனிதனை தாக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை.
அதேநேரம் மனிதர்கள் உணவளிப்பதால், குரங்குகள், மனிதன் மீதான பயத்தை இழந்துவிட்டன. மனிதர்களின் உணவுகள் சுலபமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் அவற்றை பெறுவதற்காக காத்திருக்கின்றன. அப்படி காத்திருக்கும் போது, எரிச்சலூட்டும் விஷயம் நடந்தால் கடித்து வைத்துவிடும். அப்படித்தான் மேடவாக்கத்தில் நடந்துள்ளது.
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த குமார் என்ற நபர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் மது அருந்தி உள்ளார். பின்னர் ஒயின் ஷாப் அருகே இருந்த குரங்கு ஒன்றியிடம் ஆசையாக கொய்யாக்காவை ஊட்டி உள்ளார். அப்போது அமைதியாக இருந்த குரங்கு கோபப்பட்டது. சட்டென பாய்ந்த அந்த குரங்கு அவரை கடித்து குதறியுள்ளது.
அப்போது உடன் இருந்த ஒரு நபர் கடித்து விடும் என எச்சரித்தும் கேட்காமல்இ அந்த நபர் வலுக்கட்டாயமாக குரங்கிற்கு கொய்யாக்காவை ஊட்டியிருந்தார். அதனால் கோபப்பட்ட குரங்கு அவரை கடித்து குதறிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications