தொழிலதிபர் கடத்தல் வழக்கு... 7 மாதமாக தலைமறைவான மாஜி இன்ஸ்பெக்டர் கைது.. சிபிசிஐடி அதிரடி!
சென்னை: சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் சரவணன் கடத்தப்பட்ட வழக்கில், 7 மாதமாக தலைமறைவாக இருந்த காவல்துறை முன்னாள் ஆய்வாளர் சரவணன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் காவலர்கள் அனைவரும் தலைமறைவாகினர். பின்னர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா மற்றும் சங்கர் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொழிலதிபரை கடத்திய வழக்கில் தேடப்பட்டு வரும் 6 பேரையும் இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.இந்தநிலையில் காவல்துறை முன்னாள் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 7 மாதங்களாக தலைமுறைவாக இருந்த சரவணன், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை காவல் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை அனுமதி வழங்கப்பட்டது.
இதுவரை இந்த வழக்கில் உதவி ஆணைய ர் சிவகுமார், முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications