தமிழ்நாட்டில் டேட்டா ஹப்.. சென்னையில் ரூ.1,000 கோடி முதலீட்டில் வரும் பிரமாண்டம்!
சென்னை: உலகளாவிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன், சென்னையில் ரூ.1,000 கோடி மதிப்பில் பிரமாண்டமான டேட்டா சென்ட்டர்களை அமைக்க திட்டமிட்டிருக்கிறது.
சென்னை அம்பத்தூரில் ஒரு மாபெரும் 'ஹைப்பர்ஸ்கேல்' டிஜிட்டல் உள்கட்டமைப்பு மையத்தை உருவாக்க பிளாக்ஸ்டோன் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான முதலீடு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக பிளாக்ஸ்டோனின் 'லுமினா கிளவுட் இன்ஃப்ரா' நிறுவனம், அம்பத்தூரில் 16 ஏக்கர் நிலத்தை ரூ.500 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த மையத்தின் ஆரம்பக்கட்ட மின் திறன் 216 மெகாவாட் ஆக இருக்கும்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பிளாக்ஸ்டோன் நிறுவனம், பெங்களூரைச் சேர்ந்த பேரி குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. பேரி குழுமம் ஏற்கனவே NTT போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்குத் தரவு மையங்களை அமைத்துக் கொடுத்த அனுபவம் வாய்ந்தது. இவர்கள் 'வடிவமைப்பு-கட்டமைப்பு-வழங்குதல்' என்ற முறையில் இந்த மையத்தை உருவாக்கித் தருவார்கள்.
சென்னை ஏன் தேர்வு செய்யப்பட்டது?
சர்வதேச தரவு போக்குவரத்தை இணைக்கும் கடலடி கேபிள்கள் சென்னையில் நிலத்தை வந்தடைவதால், குறைந்த தாமதத்தில் இணையச் சேவையை வழங்க முடியும். எனவேதான் சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
அம்பத்தூர் பகுதி ஏற்கனவே தரவு மையங்களுக்கான ஒரு மையப்புள்ளியாக வளர்ந்து வருகிறது. இங்கு தடையில்லா மின்சாரம் மற்றும் பிற வசதிகள் சிறப்பாக உள்ளன.
பிளாக்ஸ்டோனின் இந்திய வளர்ச்சி:
இந்த முதலீட்டின் மூலம், பிளாக்ஸ்டோன் இந்தியாவில் 700 மெகாவாட்டிற்கும் அதிகமான தரவு சேமிப்புத் திறன் கொண்ட மிகப்பெரிய உரிமையாளர்களில் ஒருவராக மாறும். இந்நிறுவனம் ஏற்கனவே நவி மும்பை மற்றும் ஹைதராபாத்திலும் இது போன்ற மையங்களை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications