Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என் கடத்தல்காரர்கள்.." காலையில் ஷாக்! செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பரபர.. என்ன மேட்டர் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை ஏர்போர்ட்டில் சிலர் கடத்தியதாகப் பதிவிட்ட போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நமது நாட்டின் முக்கியமான செஸ் ஜாம்பவான் என்றால் அது விஸ்வநாதன் ஆனந்த் தான். அவரை பார்த்துத் தான் இன்று பல ஆயிரம் இளைஞர்கள் செஸ் போட்டிகளுக்கு வந்தார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இந்திய செஸ் விளையாட்டில் தவிர்க்கவே முடியாத இடம் எப்போதும் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு உண்டு.

 Chess legend Viswanathan Anand post explaining complex Chess move task from airport

இந்த விஸ்வநாதன் ஆனந்த் நமது நாட்டின் செஸ் ஹீரோ மட்டுமல்ல.. அவர் அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்பவே அதிகம். இதற்கிடையே நேற்று வெள்ளிக்கிழமை விஸ்வநாதன் ஆனந்த் தனது எக்ஸ் பக்ககத்தில் பதிவிட்ட ட்வீட் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கடத்தல்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "விமான நிலையத்தில்.. என் கடத்தல்காரர்கள்.. ஒரு வழியாக என்னை விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவர் அலெக்ஸாண்ட்ரா போட்டேஸ் மற்றும் ஆண்ட்ரியா போட்டேஸ் டேக் செய்து இருந்தார். அவரது இந்த ட்வீட் முதலில் பலருக்கும் ஷாக் தந்தது. அவரது எக்ஸ் பதிவும் இணையத்தில் டிரெண்டானது. நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைக் கூறிய நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் உடனடியாக இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

என்ன மேட்டர்: அவர் டேக் செய்திருந்த அலெக்ஸாண்ட்ரா போட்டேஸ் மற்றும் ஆண்ட்ரியா போட்டேஸ் ஆகியோர் பிரபல சதுரங்க வீரர்கள் ஆவர். மேலும், அவர் தொடர்ச்சியாக தங்கள் சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். விஸ்வநாதன் ஆனந்த் ஒரு சதுரங்க நகர்வைக் குறிப்பிடும் வகையிலேயே அவர்களை டேக் செய்து முதலில் கடத்தல்காரர்கள் எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர், "என்னை விடுவிக்க ஒரு சிக்கலான சதுரங்க மூவை விடுவிக்க வேண்டும் என்று அலெக்ஸாண்ட்ரா போட்டேஸ் என்னிடம் கூறினார். செஸ் ஆட்டத்தில் ஒரு நிலையைக் காட்டி அங்கே பிளாக் ஆட்டக்காரர் எப்படி விளையாட வேண்டும் எனக் கேட்டார். Kd5க்கு நகர்த்த வேண்டும் எனச் சொன்னேன். சரியான பதிலைக் கொடுத்ததாலேயே அவர்கள் என்னை விடுவித்தார்கள்.

விடை என்ன: கூடுதல் விளக்கம் என்னவென்றால். இது ஒரு போட்டி என்பதால், கறுப்பு பிளேயர் Kd5க்கு காயை நகர்த்த வேண்டும். அப்போது தான் வெள்ளை ராஜா அணிவகுப்பை ராணி பக்கம் மெதுவாக்கும். மேலும் பணயக்கைதிக்கும் (அவரை சொல்லிக்கொள்கிறார்) விடுதலை கிடைக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

 Chess legend Viswanathan Anand post explaining complex Chess move task from airport

விஸ்வநாதன் ஆனந்த்: தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் ஆவார். ஆனந்த் 1988ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து கிராண்ட்மாஸ்டர் ஆனார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவது அதுவே முதல்முறையாகும். FIDE ரேங்கில் இவர் டாப் இடத்தில் இருந்தார். இப்போதும் கூட பல இந்திய இளம் செஸ் வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தற்போது இந்திய செஸ் பொன்னான காலத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது நமது நாட்டில் இளம் வீரர்கள் பலர் 2700+ எலோ மார்க் பெற்றுள்ளது உண்மையாகவே பாராட்ட வேண்டிய ஒன்று. எல்லா காலங்களிலும் இதுபோல நடக்காது; இது உண்மையில் ஒரு சிறப்பான நிகழ்வு. செஸ்ஸில் அடுத்த தலைமுறை வலுவாக இருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளை உச்சத்தில் செலவிடப் போகிறார்கள் என்பதுதான்" என்று அவர் கூறியிருந்தார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+