ஸ்ரீபதியின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில்.. முதல் பழங்குடியின பெண் நீதிபதி.. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 வயதே ஆன ஸ்ரீபதி என்ற பழங்குடியின மாணவி நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மாணவி ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் என்று ட்வீட் போட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 23 வயதே ஆன ஸ்ரீபதி என்ற பழங்குடியின மாணவி நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இந்த செய்தி அறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது #DravidianModel அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஸ்ரீபதி அவர்கள் 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்!
— M.K.Stalin (@mkstalin) February 13, 2024
பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு… pic.twitter.com/Mpd30PBBeZ
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்! “நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும் பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன் னேறவேண் டும்வைய மேலே!” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications