சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"புயல்ங்க".. சுத்திட்டு வருது டபுள் சக்கரங்கள்.. பின்னியெடுக்க போகும் மழை.. அலர்ட்டா இருங்க மக்களே

இன்று முதல் அடுத்தடுத்து 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரிக்கு நல்ல மழை இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாத துவக்கத்திலேயே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பிறகு மெல்ல மெல்ல வலுவிழந்தது.

 வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தம்..புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் சொன்னது இதுதான்! வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தம்..புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் சொன்னது இதுதான்!

 யுத்த வானம்

யுத்த வானம்

எனினும், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது.. இதற்கு பிறகு, சென்னை வானிலை மையத்தின் அறிவிப்புகள்படி, தமிழகத்தில் மழைப்பொழிவு தினமும் இருந்து கொண்டே வந்தன.. குறிப்பாக, டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்றும் சமீபத்திய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 சுத்துது சக்கரம்

சுத்துது சக்கரம்

மற்றொருபக்கம் வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்டிருந்த அறிவிப்பில், டிசம்பர் 2வது வாரத்தில் இந்தோ- சீனா கடல் பகுதியில் சக்கரம் உருவாகலாம். சக்கரங்கள் என்பவை பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும் என்றும் கூறியிருந்தது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.. இன்னொருபக்கம், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் 2 புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது... இப்போது புது தகவல் வெளியாகி உள்ளது..

 நியூ அறிவிப்பு

நியூ அறிவிப்பு

அரபிக் கடலிலும், வங்கக்கடலில் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியிலும் இந்த சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் அடிப்படையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 ஊடுருவும்

ஊடுருவும்

படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 8, 9ம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 2,3ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10 மணி + 8 மாவட்டம்

10 மணி + 8 மாவட்டம்

தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... காரைக்காலிலும் காலை 10 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பல இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chill Chill announcement for tamil nadu and new pressure form on 5th december in the bay of bengal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X