பரிசோதனை அதிகம் என்பதால் பாதிப்பு அதிகமாக தெரிகிறது.. மக்கள் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் பேச்சு
சென்னை: பரிசோதனை அதிகம் என்பதால் பாதிப்பு அதிகமாக தெரிகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தின் மொத்த பாதிப்பில் சென்னையில் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொத்து கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு வீச்சில் பணிகள் நடைபெறுகின்றன. மூன்றாவது முறையாக லாக்டவுன் அமலில் இருந்தாலும் 40 நாட்கள் கழித்து ஒரு சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல்வர்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜே ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்பதற்காக மாலை 6 மணிக்கு மாநில மக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா தடுப்பு பணியை ஒருங்கிணைக்க 12 உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மக்கள் நெருக்கம்
சென்னையில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா பணியை கவனிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த நோய் அதிகரிக்க காரணம் சென்னையில் மக்கள் நெருக்கமாக வசிப்பது, இடங்கள், குறுகலான தெருக்கள்.

அச்சம் வேண்டாம்
மேலும் பொது கழிப்பறையை மக்கள் பயன்படுத்துவதும் நோய் பரவ காரணம் ஆகும். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்று 11 ஆயிரம் பேர் பரிசோதனை செய்துக் கொள்கிறார்கள், இதனால்தான் நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்.

முகக் கவசம்
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்கள் எண்ணெய், பருப்பு, அரிசி, சர்க்கரை போன்றவற்றை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications