விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.. பிரேமலதாவும், சுதீஷும் வரவேற்பு
Recommended Video

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் வருவதற்கே தேமுதிக இழுத்தடித்து ஒரு வழியாக கடைசியில் ஒப்புக் கொண்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிடுவது குறித்த பேச்சுவார்த்தை தற்போது அதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேமுதிக கேட்கும் அதே தொகுதிகளை பாமகவும் கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது.
தொகுதி பங்கீடுகளை முடித்து விட்டு அடுத்து வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு விவகாரத்தில் சட்டுபுட்டுனு ஒரு முடிவுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் அனைத்து கட்சிகளும் உள்ளன.

இந்த நிலையில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையும் நடத்தப்பட்டது.













Click it and Unblock the Notifications