இனி கூட்டம் கூடினால் அவ்வளவுதான்.. தமிழக அரசு போட்ட அதிரடி அடுத்த உத்தரவு.. அதிகாரிகள் தீவிரம்..!
சென்னை: கொரோனா 3வது அலை பரவ தொடங்கி உள்ள சூழலில், ஆரம்ப கட்டத்திலேயே உறுதியான நடவடிக்கை வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக உள்ளார். இதன்படி தமிழகத்தில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை கண்காணித்து அந்த பகுதிகளை உடனே மூட வேண்டும் என்று மாவட்டஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31.7.2021 முதல் 9.08.2021 காலை 6 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டாலின் உத்தரவு
சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள்/மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

9 இடங்கள் மூடல்
இதன்படியே கூட்டம் அதிகமாக காணப்படும் சென்னை திநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 9 பகுதிகளில் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலைமுதல் மாம்பலம் ரயில் நிலையம் வரையிலும், புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரையிலும், திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரையிலும், ஃபக்கி சாஹிப் தெரு முதல் அபிபுல்லா தெரு வரையிலும், புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்க சாலை சந்திப்பு வரை , ராயபுரம் மார்க்கெட் அமைந்தகரை மார்க்கெட் பகுதிகள், கொத்தவால்சாவடி மார்க்கெட், ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதிகளை உடனடியாக அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த பகுதிகள் திறக்கப்படாது.

கடைகள் மூடப்படலாம்
மேலே சொன்ன பகுதிகள் அனைத்தும் சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும். கொரோனா பரவலை தடுக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையைப் போல் கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, வேலூர் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பஜார்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் பொருட்களை வாங்கினாலோ இந்த பகுதிகளும் அடைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கூட்டம் கூடக்கூடாது
ஏனெனில் அரசு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்களே மூடுவது குறித்து முடிவெடுக்கலாம் என்று அறிவித்துள்ளதால், மக்கள் நெருக்கத்தை கட்டுப்படுத்த கடைகள் அதிகம் உள்ள பகுதிகளை மூட உத்தரவு போடும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
Recommended Video

எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்று சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர தொடங்கி உள்ளது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே 3வது அலையை தடுக்க அரசு விரும்புகிறது. கூட்டம் கூடுவதை தடுப்பது. முககவசம் அணிவதை கடுமையாக அமல்படுத்துவது, மக்கள் வெளியில் அவசியம் இன்றி செல்வதை தடுப்பது இவை தான் கொரோனாவை தடுக்க உள்ள வழிகள் ஆகும்.

மக்களே கவனம்
தடுப்பூசி போடும் பணிகளை விரைவுப்படுத்துவதும் 3வது அலை பாதிப்பை குறைக்க முடியும் என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. இந்தியாவில் 3வது அலை பரவ தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது . கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகாவில் படிப்படியாக கொரோனா அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும். மக்கள் அடுத்த 3 வாரங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications