Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முகூர்த்தம்".. ஒரே நேரத்தில் நோட் பண்ணீங்களா? இங்க ஸ்டாலின்! மதுரையில் அழகிரி! வண்டியை விட்ட ஓபிஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் பலர் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து பல்வேறு திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

புரட்டாசி மாதம் இன்னும் 2 வாரங்களில் வர உள்ளது. புரட்டாசி மாதம் திருமணம் செய்ய முடியாது என்பதால் பல இடங்களில் இன்று திருமணம் நடைபெற்று வருகிறது.

இன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் இன்று ஒரே நாளில் நடைபெறுகின்றன. அரசியல் ரீதியாக பிரபலமான சிலரின் திருமணம் கூட இன்றுதான் நடைபெறுகிறது.

கோவை, மதுரை, விருதுநகரில் இன்று நடைபெற்ற மூன்று திருமணங்கள் அரசியல் ரீதியாக கவனம் பெற்றன.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இன்று முதல்வர் ஸ்டாலின் முக்கியமான திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்தியின் திருமணம் இன்று நடைபெற்றது. அவரின் பேத்திக்கும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தன் மகனுக்கும் இந்த திருமணம் நடைபெற்றது. கோவை கொடிசியா வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் ஸ்ரீநிதி - கெளசிக் தேவ் ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின்தான் மாலை எடுத்துக்கொடுத்தார். மிக பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது.

கோவை

கோவை

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில்தான் கோவைக்கு பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில்தான் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த திருமண நிகழ்விற்காக கோவைக்கு பயணம் மேற்கொண்டார். பக்கா திமுக நிர்வாகிகள் வீட்டில் திருமணம் என்பதால், முதல்வர் ஸ்டாலின் மேடையில் கொஞ்சம் அரசியலும் பேசினார். திமுகவின் வாக்குறுதிகள் 70 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும். இது திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 அழகிரி

அழகிரி

இங்கே முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் திருமண நிகழ்வில் கலந்து கொண்டது போலவே இன்னொரு பக்கம் மதுரையில் தனக்கு நெருக்கமான உறவினர்கள் வீட்டு திருமணத்தில் மு.க அழகிரி கலந்து கொண்டார். இந்த திருமணத்திற்கு சில திமுக தலைவர்களும் வருகை புரிந்து இருந்தனர். எளிமையாக நடந்த விக்னேஷ் குமார் - பிரியதர்ஷினி தம்பதியினர் திருமணத்தில் அழகிரி மாலை எடுத்துக்கொடுத்தார். இவருடன் அழகிரிக்கு நெருக்கமான சில முன்னாள் திமுக நிர்வாகிகள் மட்டும் திருமணத்திற்கு வந்து இருந்தனர்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இதற்கு இடையில் ஓ பன்னீர்செல்வம் இன்று விருதுநகர் சென்றார். அங்கு உள்ள எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் அவர் விருதுநகர் சென்றார். இந்த பயணத்தின் போது தொண்டர் ஒருவரின் வீட்டில் நடந்த இல்ல திருமணத்தில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தம்பதிகளுக்கு ஓபிஎஸ்தான் மாலை எடுத்துக்கொடுத்தார். இந்த திருமணம் முடிந்ததும் விருதுநகரில் உள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து பேச ஓ பன்னீர்செல்வம் காரில் புறப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+