கத்தியால் குத்தப்பட்டு பலியான இப்ராஹிம் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி.. முதல்வர் உத்தரவு!
சென்னை : விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் போதை நபர்களால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டு உயிரிழந்த இப்ராஹிம் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஞானசேகர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு வந்த ஞானசேகரின் மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் அங்கு போதையில் தகராறு செய்துள்ளனர். அவர்கள் சண்டையிட்டு கொண்டிருந்த போது பள்ளிவாசலுக்கு சென்று திரும்பும் வழியில் அங்கு வந்த இப்ராஹிம் என்பவர் அவர்களை தடுத்து சமரசம் செய்து வைக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், வல்லரசு இருவரும் இப்ராஹிமை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், தனிப்பட்ட குடும்பப் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது, அங்கு தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் போதை நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த இப்ராஹிம் மறைவு தனக்கு வேதனை தருவதாகத் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்த இப்ராஹிம் சஞ்சி குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications