Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருகிய நெற்பயிர்கள்.. குறுவை பாதிப்பு.. விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா? முதல்வர் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தண்ணீரின்றி குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளைய தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பயிர்கள் கருக தொடங்கின.

CM Stalin to held meeting with collectors Kuruvai Paddy Crops withered without water in Delta districts

நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர். ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகின.

குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர், ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி பகுதிகளில் சுமார் 30000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்க்க தொடங்கிவிட்டனர்.

ஏக்கருக்கு சுமார் 25,000 வரை கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்ட நிலையில் உரிய தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை சாகுபடி கருகத் தொடங்கியுள்ள நிலையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே குறுவை பயிர்கள் பாதிப்பு தொடர்பாகவும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுடன் நாளைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+