ஒன் டூ ஒன்.. 3 தொகுதி நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.. பரபரக்கும் அறிவாலயம்!
சென்னை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், 3 தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே ஜூன் முதல் வாரத்தில் ஒன் டூ ஒன் பேசுவோம் என்று கூறி இருந்த நிலையில், தற்போது முதற்கட்ட சந்திப்பை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் பணிகளை முடிக்க அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இன்னொரு பக்கம் திமுக கூட்டணி இணக்கமாக செயல்பட்டு வருகிறது.

ஸ்டாலின் தீவிரம்
இதனால் திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். அதற்கேற்ப தென் மாவட்டங்களை குறி வைத்து திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து வரும் மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ரோடு ஷோ நடத்தி வருகிறார்.
மதுரை பொதுக்குழு
அதேபோல் புதிய திட்டங்களை அறிவிப்பதோடு, நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இதனிடையே திமுக தரப்பில் சில வாரங்களுக்கு முன்பாக மதுரையில் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் சந்திப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.
ஒன் டூ ஒன் சந்திப்பு
ஜூன் முதல் வாரத்தில் தொடங்கவிருந்த இந்த சந்திப்பு, கொஞ்சம் தாமதமாக தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக உசிலம்பட்டி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் மூலமாக திமுக நிர்வாகிகளுக்கு இடையிலான மோதல் மற்றும் அதிருப்தி குறையும் என்று பார்க்கப்படுகிறது.
தேர்தல் பணிகள்
அதேபோல் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நிர்வாகிகளுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு கொண்டு வந்து தேர்தல் பணிகளில் கவனத்தை திருப்பவே இந்த ஒன் டூ ஒன் சந்திப்பு என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திமுகவின் பென் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு மூலமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக சில அறிவுறுத்தல்களை வழங்கவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
சந்திப்பு ஏன்?
சில மாதங்ளுக்கு முன்பாக திமுகவில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதற்கேற்ப சில பணிகளை முடுக்கிவிடவும், தொகுதி திமுகவின் நிலை மற்றும் மக்களின் எண்ணங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் சந்திப்பு நடப்பதாக பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம் -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்!












Click it and Unblock the Notifications