உடனே மாற்ற வேண்டும்! மொத்தமாக கூண்டோடு மாற்றப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்! ஸ்டாலின் பயங்கர முடிவு
சென்னை: தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பட்டியலை முதல்வர் ஸ்டாலின் தயாரித்து வருகிறாராம்.
சமீபத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று வந்த சுப்ரியா சாஹு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பல உயர்மட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று மாநில அரசால் இடமாற்றம் செய்யப்பட்டனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் தலைவராக இருந்த மற்றொரு பிரபல மூத்த அதிகாரி ககன்தீப் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரதீப் யாதவ் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களில் இருந்து உயர்கல்விக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் மாற்றம்: பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளுக்கு கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் பதவிகளை உருவாக்க அரசு அனுமதி அளித்துள்ளது. . எனவே, இதுவரை கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன் ஆகியவற்றைக் கவனித்து வந்த சந்திர மோகனுக்கு பதில் மங்கத் ராம் சர்மா இதை கவனிப்பார்.
சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறக்கட்டளை பி.சந்திர மோகன் கவனிப்பார். பொதுப்பணித் துறையை கவனிப்பார்.
மணிவாசன் நீர்வளப் பொறுப்பாளராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளராக இருந்த பி செந்தில் குமார் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாற்றியமைக்கப்பட்ட துறைகளின் பிற அதிகாரிகள்: ஆர்.செல்வராஜ் (தமிழ்நாடு சாலைத் துறை திட்டத்தில் இருந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு), ஏ ஜான் லூயிஸ் (அரசு கேபிள் டிவி முதல் சமூக பாதுகாப்புத் திட்டம் வரை) மற்றும் எம்.விஜயலட்சுமி (வீடு மற்றும் நகர்ப்புறத்திலிருந்து) இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் வளர்ச்சி) ஆவர்.
நேற்று முக்கிய அதிகாரிகள் மாற்றம்: இதோடு இல்லாமல் நேற்று.. சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள். அதிலும் அருண் இளமையான துடிப்பான அதிகாரி. இன்னொரு பக்கம் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர்.
மாற்ற போகும் ஸ்டாலின்: தமிழ்நாட்டில் ஆட்சி அதிகார ரீதியாக முதல்வர் ஸ்டாலின் பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளார் என்கிறார்கள். முக்கியமாக ஆளும் தரப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான டீசர்தான் நேற்று நடந்த சம்பவம் என்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி விவகாரம் கையை மீறி போன நிலையில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளாராம். முதல்வர் ஸ்டாலின் இன்னும் 1 வாரங்களில் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். அந்த பயணம் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம், ஆர்ம்ஸ்ட்ராங் கையை மீறி போனதால் விரைவில் தமிழ்நாடு அரசியலில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications