Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று இரவு டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.. இதான் மேட்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அப்போது ஆளுநர் விவகாரம் பற்றியும் பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

டெல்லி பயணம் ஏன்? : முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று, கடந்த 2021 ஜூன் 3-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தரைத்தளம் மற்றும்6 மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுரமீட்டர் பரப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

 CM Stalin visits delhi tonight : to meet president Droupadi murmu

இங்கு இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் - இரைப்பை,புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் ரூ.230 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். டெல்லியில் ஏப்.28ஆம் தேதி குடியரசுத் தலைவர் முர்முவை நேரில் சந்தித்து, மருத்துவமனையை திறந்துவைக்க அழைப்பு விடுக்கிறார்." எனக் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் விவகாரம் தொடர்பாக : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

தமிழ்நாடு அரசு அனுப்பி உள்ள பல மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு கால நிர்ணயம் செய்யவேண்டும் என சமீபத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதை பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களின் வரவேற்றனர். இதுதொடர்பாகவும் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிப்பார் எனக் கூறப்படுகிறது.

டெல்லியில் ஆளுநர் ரவி, எடப்பாடி : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் ரவி, தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றுள்ளார். வரும் 28-ஆம் தேதி வரை டெல்லியில் இருப்பார் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், குடியரசுத் தலைவர் மற்றும் சில மத்திய அமைச்சர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை டெல்லி சென்றார். அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ள நிலையில் டெல்லி சென்றது பல்வேறு யூகங்களைக் கிளப்பி இருந்தது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+