செப்டம்பரில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு! திருவனந்தபுரம் செல்கிறார் ஸ்டாலின்!
சென்னை: வரும் செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்தாண்டு நடைபெறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறார்.
3 மேட்டர்.. 2 அல்டிமேட் பிளான்.. எல்லாமே போச்சா.. இதான்
தென் மாநிலங்கள்
கர்நாடகா, ஆந்திராம் தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய வகையில் ஆண்டுக்கு ஒரு முறை தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென் மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநிலத்தின் பிரச்சனைகள், தேவைகள், திட்டங்கள் பற்றியெல்லாம் விரிவாக விவாதிப்பார்கள்.
முதலமைச்சர் பங்கேற்கிறார்
இந்த மாநாட்டில் தென் மாநில அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள். கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிற்கு அமித்ஷா தலைமை தாங்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அதில் பங்கேற்க செல்லாதது குறிப்பிடத்தக்கது. தனக்கு பதில் அமைச்சர் பொன்முடியை அந்த மாநாட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். இதனிடையே இந்தாண்டு தாமே நேரடியாக செல்ல திட்டமிட்டுள்ளார்.
செப்டம்பர் முதல் வாரம்
இதற்காக வரும் செப்டம்பர் முதல் வாரம் அவர் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார். தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன் வைக்க வேண்டிய கோரிக்கைகள் விவாதிக்க வேண்டிய சப்ஜெக்ட்கள் பற்றி தமிழக அரசு உயர் அதிகாரிகள் குறிப்புகளை தொகுத்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்துகொள்வாரா என்பது சந்தேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம்
திருவனந்தபுரத்தில் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகளை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கவனித்து வருகிறார். 6 மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.