சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை.. வரிசையா மழை பெய்யுமாம்.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!
தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. தற்போதும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

என்ன மழை
அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது. அதேபோல் தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் தீவிரமாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

இன்றும் நாளையும்
இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வேகமாக உருவாகி வரும் வளிமண்டல சுழற்சி கடலோர மாவட்டங்களில் அதிக மழையை கொண்டு வரும். இதனால் ராமநாதபுரம், சென்னை, டெல்டா, கடலூரில் அதிக மழை பெய்யும்.

சென்னை எப்படி
சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை வரிசையாக மழை பெய்ய போகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கையில் எப்போதும் குடை வைத்திருங்கள். சமயங்களில் மிக கனமழை பெய்ய கூட வாய்ப்புள்ளது.
தமிழகம் எப்படி
தமிழகத்தில் அதிகமாக கன்னியாகுமரியில் நேற்று குழித்துறையில் 140 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல் சுரலோட் பகுதியில் 83 மிமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் 82 மிமீ மழை பெய்துள்ளது, என்று தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications