சென்னை, பெங்களூருக்கு போட்டியாக கோவை.. நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 5ஆம் இடம்!
சென்னை: சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளது.
நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆர்எப்) ஒவ்வொரு ஆண்டும் பட்டியலை வெளியிடும்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

பட்டியல்
கற்பித்தல், கற்றல் முறை, ஆராய்ச்சி, தொழில்முறை, மாணவர்களின் திறன், தேர்ச்சி விகிதம் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை நேற்றைய தினம் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

சென்னை ஐஐடி
மருத்துவம், என்ஜினீயரிங் என பல்வேறு பிரிவுகளில் பல்கலைக்கழகத்திற்கும் கல்லூரிகளுக்கும் தனித்தனியாக இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஒட்டுமொத்த பிரிவு மற்றும் என்ஜினீயரிங் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 4ஆவது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் சென்னை ஐஐடி முதல் இடத்தை பிடித்து உள்ளது.

நகரங்கள்
சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைக் கொண்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. மொத்தம் 83 கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளது. அதைத் தொடர்ந்து 69 கல்வி நிறுவனங்களுடன் சென்னை இரண்டாம் இடத்திலும், 40 கல்வி நிறுவனங்களுடன் பெங்களூர் 3ஆம் இடத்திலும் உள்ளன. மும்பை 39 கல்வி நிறுவனங்களுடன் 4ஆம் இடத்தில் உள்ளது.

கோவை
இந்தப் பட்டியலில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கோவை 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. கோவையைச் சேர்ந்த 32 கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. அதிகபட்சமாக இன்ஜினியரிங் பிரிவில் 9 கல்வி நிறுவனங்களும் கல்லூரி பிரிவில் 8 கல்லூரிகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. கட்டிடக்கலை மற்றும் சட்டம் பிரிவுகளைத் தவிர மற்ற அனைத்து பிரிவுகளிலும் கோவை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன.

திருப்பூரில் இல்லை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை, கோவை, உள்ளிட்ட 25 நகரங்களில் இருந்து மொத்தம் 163 கல்வி நிறுவனங்கள் டாப் பட்டியலில் இடம் பெற்று உள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தஞ்சை நகரங்கள் டாப் 5 இடங்களில் உள்ளன. பெரிய நகரங்கள் வரிசையில் திருப்பூரில் இருந்து எந்தவொரு நகரமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications