மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்றதாக அரசு உதவி பெறும் பள்ளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி தலைமையாசிரியை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் என போலீசுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 18 ம் தேதி தமிழகம் வந்தார். கோவையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்தினார்.

கோவை கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கிய பிரதமர் மோடியின் ஊர்வலம் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி சீருடையில் மாணவர்களும் பங்கேற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரங்களில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது விதியாக உள்ளது. இத்தகைய சூழலில் இந்த சம்பவம் விவாதத்தை கிளப்பி உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து கோவை லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிராந்திகுமார் பாடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பங்கேற்றது சாய்பாபா காலனியை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயிலும் மாணவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளியின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட கல்வி அலுவலர் புனிதா விசாரித்தார். அதன்பிறகு பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் பள்ளி நிர்வாகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளியின் தலைமையாசிரியை புகழ் வடிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், ‛‛பிரதமர் மோடியின் வாகன பேரணியில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்றதாக கூறுவது தவறானது. பிரசாரத்துக்கு மாணவர்களை பயன்படுத்தியதாக கூறப்படும் புகாரும் உண்மைக்கு புறம்பானது. பள்ளி நிர்வாகம் மீது தவறான நோக்கில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது.
உங்களுக்கு தகரடப்பா தூக்க அப்பா இருந்தார்! ஆனால் எனக்கு.. அண்ணாமலைக்கு கோவை அதிமுக வேட்பாளர் பதிலடி
இந்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது வழக்கு தொடர்பாக கோவை போலீசார் ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை பள்ளி நிர்வாகம் மீது போலீசார் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம்’’ என உத்தரவிட்டார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications