சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வம்பை விலைக்கு வாங்கிய ஆர்.எஸ்.பாரதி! திமுகவுக்கு புது தலைவலி! மாணிக்கம் தாகூர் எம்.பி.கண்டனம்!

Google Oneindia Tamil News

சென்னை: காமராஜர் பற்றி திமுக அமைப்புச் செயலாளர் ஆ.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காமராஜர் பேசாத ஒன்றை பேசியதாக ஆர்.எஸ்.பாரதி கூறியது அநாகரீகமானது என மாணிக்கம் தாகூர் விளாசியுள்ளார்.

ஆ.ராசா, பொன்முடி, சிவசங்கர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.எஸ்.பாரதி போன்ற முக்கியப் பிரமுகர்களின் நடவடிக்கைகளால் திமுக தலைமைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் உதயசூரியனில் இனி “சந்திரன்” - திமுகவில் அதிரடி மாற்றங்கள்.. 7 மாவட்டங்களில் டுவிஸ்ட்? திருவள்ளூர் உதயசூரியனில் இனி “சந்திரன்” - திமுகவில் அதிரடி மாற்றங்கள்.. 7 மாவட்டங்களில் டுவிஸ்ட்?

 ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என காமராஜர் கூறியதாகவும் கடைசியில் அவருக்கே கல்லறை கட்டியது திமுக ஆட்சி தான் எனவும் தெரிவித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரையும், காமராஜர் அபிமானிகளையும் கொதிப்படைய வைத்துள்ளது. இதனிடையே இது தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஆர்.எஸ்.பாரதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அநாகரீகமான பேச்சு

அநாகரீகமான பேச்சு

''பெருந்தலைவர் காமராஜரை இழிவுப்படுத்தி இது போன்ற (திமுகவின்) அநாகரீகமான பொய்யான பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதியை வன்மையாக கண்டிக்கிறேன். பெருந்தலைவர் என்றும் வெட்டுவேன் என அரசியல் பேசியவர் இல்லை. அவர் புகழ் என்றும் வாழும்..'' என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார் மாணிக்கம் தாகூர் எம்.பி.

தேவையற்ற பேச்சு

தேவையற்ற பேச்சு

திமுக காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஒருவர், திமுகவின் அமைப்புச் செயலாளருக்கே கண்டனம் தெரிவித்துள்ளதால் இந்த நிகழ்வு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் எந்த திசையில் செல்கிறது என்பதை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தலைமைக்கு தலைவலி

தலைமைக்கு தலைவலி

இதனிடையே ஆ.ராசா, பொன்முடி, சிவசங்கர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.எஸ்.பாரதி போன்ற முக்கியப் பிரமுகர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், திமுக தலைமைக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Congress Member of Parliament Manickam Tagore has strongly condemned DMK Organisation Secretary AS Bharti's comment about Kamaraj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X