மிக எளிய குடும்ப பின்னணி கொண்ட யசோதா... காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக உருவான பின்னணி..!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த யசோதா இன்று காலமானார். அவருக்கு வயது 75.
காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் மூன்று நாட்களுக்கு முன்னர் பங்கேற்ற அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வசதியில்லை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த யசோதா ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்து சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் அறக்கட்டளை தலைவர் என உயர்ந்த இடத்துக்கு வந்தவர். வறுமையில் தனது பள்ளிப்பருவத்தை கடந்த யசோதா, 70-களில் ரமணி பாய் என்ற மிகப்பெரிய காங்கிரஸ் பெண் சொற்பொழிவாளருடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்குகிறார்.

5 நிமிடம் வாய்ப்பு
ரமணிபாய் பொதுக்கூட்டங்களில் பேசச்செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே யசோதாவும் செல்கிறார். இப்படி தன்னுடனே பயணித்து வரும் யசோதாவுக்கு தாம் பேசும் கூட்டங்களில் 5 நிமிடம் உரையாற்றும் வாய்ப்பை ரமணிபாய் ஒரு பொதுக்கூட்டத்தில் பெற்றுக்கொடுக்கிறார். அந்த வாய்ப்பை மிக கெட்டியாக பிடித்துக்கொண்ட யசோதா மேடையில் இருப்பவர்கள் வியக்கும் அளவுக்கு பேசுகிறார்.

கட்சிக்காக பேச்சு
காங்கிரஸ் கட்சிக்காக அடிவயிற்றில் இருந்து உரத்த குரல் எழுப்பி மேடைதோறும் பின்னாளில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் கர்ஜிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் ரமணிபாய் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஜனதா கட்சிக்கு செல்ல, யசோதா காங்கிரஸ்லேயே தங்கிவிட்டார். இடத்துக்கு ஏற்றவாறு மக்களிடம் பேசுவதில் திறமையானவர் யசோதா. நகர மக்கள் மத்தியில் என்ன பேசினால் எடுபடுமோ அதை நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும், கிராமப்பகுதிகளில் என்ன பேசினால் மக்கள் ஈர்க்கப்படுவார்களோ அதை கிராமங்களிலும் அந்தக் காலத்திலேயே எந்த வியூக வகுப்பாளர்களும் இல்லாமல் பிரித்து பேசக்கூடியவர் யசோதா.

4 முறை எம்.எல்.ஏ.
பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு முதல்முறையாக 1980-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வாய்ப்பு கொடுத்தது காங்கிரஸ். அந்த தேர்தலில் வெற்றிபெற்ற இவர், அடுத்தடுத்து 1984, 2001, 2006 என மொத்தம் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்துக்கு சென்றார். இதுமட்டுமல்லாமல் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக யசோதா செயலாற்றி இருக்கிறார். சட்டமன்றத்தில் எதையும் மிக நயமாக பேசக்கூடியவர் யசோதா என்பதால் இவர் பேசுகிறார் என்றால் அவை அதை கவனிக்கத் தவறாது.

வசதியில்லை
இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட யசோதா தனக்கென்றோ, தனது குடும்பத்திற்கோ பெரிதாக எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை. வசதி வாய்ப்பு இருந்திருந்தால் அவர் ஏன் அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்க போகிறார். இதனிடையே யசோதாவை பற்றி குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அவரது தைரியத்தை கூறலாம். இல்லையென்றால் இவ்வளவு தூரம் அரசியலில் அவர் பயணித்திருக்க வாய்ப்பில்லை.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications