3 மணி நேரமாக விடாமல் சென்னையில் பிச்சு எடுக்கும் மழை.. சாலைகளில் வெள்ளம்.. மக்கள் அவதி!
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது.
Recommended Video
சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து அங்கு மழை பரவாலாக பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளதுதமிழகத்தில் வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடலோர மாவட்டங்கள் இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை எப்படி
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து அங்கு மழை பரவாலாக பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், உள்ளிட்ட பகுதிகளில் 3 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

வேறு எங்கு
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் .கனமழை காரணமாக வடபழனி, வளசரவாக்கம் போரூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் தேங்கி உள்ளது.

சென்னை மோசம்
கனமழை காரணமாக ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சேனையின் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது; தற்போது பெய்து வரும் கனமழை இன்று இரவு முழுவதும் நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications